Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

கீவ் : வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தலைநகரான கிவ்வை இன்னும் கைப்பற்ற முடியவில்லை.

காரணம் அந்த அளவுக்கு உக்ரைன் ராணுவத்தினரின் எதிர்தாக்குதல் இருப்பதுதான். மிகப்பெரும் வல்லரசு நாடான ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் மட்டுமல்லாது, பொதுமக்களும் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

ரஷ்யாவின் செச்சினியா குடியரசின் சக்திவாய்ந்த தலைவரான ரம்ஜான் கதிரோவ், உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் துறைமுகத்தின் மீது மட்டுமல்லாமல் கீவ் மற்றும் பிற உக்ரேனிய நகரங்களிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தும் என்று கூறினார். "ஒரு தாக்குதல் இருக்கும் ... மரியுபோல் மட்டுமல்ல, பிற இடங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதும்," என கதிரோவ் தனது டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.

கீவ்வை கைப்பற்ற தீவிரம்

கீவ்வை கைப்பற்ற தீவிரம்

"லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவ்ற்றை நாங்கள் முதலில் முழுமையாக விடுவிப்போம் ... பின்னர் கீவ் மற்றும் பிற அனைத்து நகரங்களையும் எடுத்துக்கொள்வோம்." என அவர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைனை சுற்றியுள்ள பல நாடுகள் ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருந்து, ஆயுதங்கள், நிதியுதவி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றன. இதனால் தான் ரஷ்யாவுக்கு உக்ரைன் கைப்பற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.

முக்கியமான வாரம்

முக்கியமான வாரம்

இந்நிலையில் வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் வீடியோ மூலம் உரையாற்றிய அவர், வரவிருக்கும் வாரமும் போரில் எந்த ஒரு வாரமும் முக்கியமானதாக இருக்கும். "ரஷ்ய துருப்புக்கள் நமது நாட்டின் கிழக்கில் இன்னும் பெரிய ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும்" என்று கூறினார்.

Recommended Video

    Zelensky Letter To Putin | புதினுக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய ஜெலன்ஸ்கி | Oneindia Tamil
    அரக்கர்கள் போல் ரஷ்யா

    அரக்கர்கள் போல் ரஷ்யா

    போர்க் குற்றங்களுக்கான பொறுப்பிலிருந்து ரஷ்யா தப்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர் , "மக்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும், யதார்த்தத்திற்கு ஏற்பவும் கற்றுக்கொள்ளவும் தைரியம் இல்லாதபோது, ​​அவர்கள் அரக்கர்களாக மாறுகிறார்கள். உலகம் அதை புறக்கணிக்கும் போது, ​​அசுரர்கள் உலகமே தங்களுக்கு ஒத்துப்போக வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதையெல்லாம் உக்ரைன் தடுத்து நிறுத்தும்," என்றார். அதாவது ரஷ்யா உலக நாடுகள் தனது பேச்சை கேட்க வேண்டும் என நினைப்பதாகவும், இல்லையேல் அசுரர்கள் போல் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+