இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம்
கீவ் : வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தலைநகரான கிவ்வை இன்னும் கைப்பற்ற முடியவில்லை.
காரணம் அந்த அளவுக்கு உக்ரைன் ராணுவத்தினரின் எதிர்தாக்குதல் இருப்பதுதான். மிகப்பெரும் வல்லரசு நாடான ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் மட்டுமல்லாது, பொதுமக்களும் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர்
ரஷ்யாவின் செச்சினியா குடியரசின் சக்திவாய்ந்த தலைவரான ரம்ஜான் கதிரோவ், உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் துறைமுகத்தின் மீது மட்டுமல்லாமல் கீவ் மற்றும் பிற உக்ரேனிய நகரங்களிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தும் என்று கூறினார். "ஒரு தாக்குதல் இருக்கும் ... மரியுபோல் மட்டுமல்ல, பிற இடங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதும்," என கதிரோவ் தனது டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.

கீவ்வை கைப்பற்ற தீவிரம்
"லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவ்ற்றை நாங்கள் முதலில் முழுமையாக விடுவிப்போம் ... பின்னர் கீவ் மற்றும் பிற அனைத்து நகரங்களையும் எடுத்துக்கொள்வோம்." என அவர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைனை சுற்றியுள்ள பல நாடுகள் ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருந்து, ஆயுதங்கள், நிதியுதவி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றன. இதனால் தான் ரஷ்யாவுக்கு உக்ரைன் கைப்பற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.

முக்கியமான வாரம்
இந்நிலையில் வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் வீடியோ மூலம் உரையாற்றிய அவர், வரவிருக்கும் வாரமும் போரில் எந்த ஒரு வாரமும் முக்கியமானதாக இருக்கும். "ரஷ்ய துருப்புக்கள் நமது நாட்டின் கிழக்கில் இன்னும் பெரிய ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும்" என்று கூறினார்.
Recommended Video

அரக்கர்கள் போல் ரஷ்யா
போர்க் குற்றங்களுக்கான பொறுப்பிலிருந்து ரஷ்யா தப்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர் , "மக்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும், யதார்த்தத்திற்கு ஏற்பவும் கற்றுக்கொள்ளவும் தைரியம் இல்லாதபோது, அவர்கள் அரக்கர்களாக மாறுகிறார்கள். உலகம் அதை புறக்கணிக்கும் போது, அசுரர்கள் உலகமே தங்களுக்கு ஒத்துப்போக வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதையெல்லாம் உக்ரைன் தடுத்து நிறுத்தும்," என்றார். அதாவது ரஷ்யா உலக நாடுகள் தனது பேச்சை கேட்க வேண்டும் என நினைப்பதாகவும், இல்லையேல் அசுரர்கள் போல் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications