திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு.. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை.. உயரும் கொரோனா மரணங்கள்.. பகீர் ரஷ்யா
ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது
மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை கூறுகிறார்கள்.
ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதையடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வர அனுமதி இல்லை.. அதேசமயம், ஊதியத்துடன் கூடிய விடுப்பும் தரப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கவலை
மற்றொரு பக்கம் தடுப்பூசிகளை செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது.. ஒரே நாளில் 40 ஆயிரம், 50 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருவது அந்நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் நவம்பர் 7ம் தேதி வரை முழு அடைப்பு அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஊரடங்கும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கவலை
இதனிடையே ரஷ்யாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.. கொரோனா மரணங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வந்தாலும், அதன் உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும், அரசு வெளியிடும் எண்ணிக்கையைவிட, கொரோனா மரணங்கள் மேலும் அதிகமாகவே இங்கு ஏற்படுகின்றன என்றும் ரஷ்ய டாக்டர்கள் கூறுகிறார்கள்.

உயிரிழப்பு
இதில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் ஏற்படும் மரணங்கள் அதிகம் என்றும், ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு, மயக்க மருந்து பற்றாக்குறை போன்றவையும் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து வருவதாகவும் அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகின்றனர் ரஷ்ய டாக்டர்கள். ரஷ்யாவில் இதுவரை 8554192 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. ரஷ்யாவில் அதிக பாதிப்புக்கு காரணமாக இருப்பது தலைநகர் மாஸ்கோ தான் என்பதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக கையில் எடுக்கப்பட்டுள்ளன.
Recommended Video

டிஸ்சார்ஜ்
நாட்டிலேயே 239,693 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும், 7,381,726 பேர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி சென்றதாகவும் கூறப்படுகிறது.. ரஷ்யாவில் மொத்தம் 14.60 கோடி என்கிற அளவில் மக்கள் தொகை உள்ளது. இதில், 10 லட்சம் பேருக்கு 1,626 பேர் என்ற அளவில் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.. அதாவது, மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 58,026 பேர் என்ற அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications