“ஆயுதத்தை கீழே போட்டா உயிர் பிழைப்பது உறுதி” ரஷ்யா கொடுத்த கடைசி வார்னிங்! உக்ரைனுக்கு பறந்த கடிதம்
கீவ் : உக்ரேனியப் படைகளை உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறும், முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் இருக்கும் சில ராணுவ துருப்புகளும் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 55 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறினாலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மற்ற பகுதிகளில் இடைவிடாத தாக்குதல் தொடர்கிறது.
முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றுவதில் ரஷ்யா கவனம் செலுத்தும் நிலையில், உக்ரைன் இறுதிவரை போராடுவதாக" உறுதியளித்துள்ளது.

அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னாள் சோவியத் அரசின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்குவதாக அறிவித்ததை அடுத்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. கீவ் அதிகாரிகளை நாங்கள் மீண்டும் ஒருமுறை அழைக்கிறோம் போராளிகளுக்கு அவர்களின் புத்தியில்லாத எதிர்ப்பை நிறுத்துவதற்கு உரிய உத்தரவுகளை வழங்கவும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும்
ஆனால் உக்ரைன் நாட்டின் அதிபர் மற்றும் அதிகாரிகள் தன் நாட்டின் ராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும் என எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள், என்பதைப் புரிந்துகொண்டு இந்த முடிவை தானாக முன்வந்து எடுக்கவும் ஆயுதங்களைக் கீழே போடவும் நாங்கள் போராளிகளை அழைக்கிறோம் என ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா விடுத்துள்ள அந்த அறிக்கையில், கிழக்கு உக்ரைனில் புதிய தரைவழித் தாக்குதல் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை.

பயங்கரமான புதிய குற்றங்கள்
ஆனால், மாஸ்கோவில் "உக்ரைன் ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பயங்கரமான புதிய குற்றங்கள் பற்றிய ஆதாரம்" இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. மரியுபோலின் அசோவ் துறைமுகத்தில் முன்னேறி வரும் ரஷ்யப் படைகளை எதிர்க்கும் உக்ரேனியப் போராளிகள் "பேரழிவுகரமான சூழ்நிலையில்" இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.

உயிர் பிழைப்பது உறுதி
"ரஷ்ய ஆயுதப்படைகள் மீண்டும் தேசியவாத பட்டாலியன்கள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படைகளுக்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தவும், நண்பகல் முதல் ஆயுதங்களை கீழே போடவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன" என்று அது கூறியது. "ஆயுதத்தை கீழே போடும் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பது உறுதி."என கூறியுள்ளது. ஆனால் வழக்கம் போல் இந்த அறிக்கையையும் உக்ரைன் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications