குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.. தெருவில் இறங்கிய மக்கள்.. அழிவை நோக்கி செல்லும் தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் பஞ்சம் மிகவும் அதிக அளவை எட்டி இருக்கிறது.
Recommended Video

கேப்டவுன்: தாய் நகரம், இதுதான் தென்னாபிரிக்க மக்கள் கேப் டவுனிற்கு வைத்து இருக்கும் பெயர். உலகில் இருக்கும் மிக அழகான நகரங்களில் அதுவும் ஒன்று.
இந்தியா அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருப்பதால் அந்த நகரம் தற்போது அடிக்கடி செய்திகளில் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் செய்திகளில் இப்படி இடம்பெற அது மட்டும் காரணம் இல்லை.
இசைக்கலைஞர்கள் அதிகம் இருக்கும் அந்த ஊரில் தற்போது மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தற்போது அந்த நாடு 'டே - ஸீரோ' நிலையை அடைந்து இருக்கிறது.
|
டே - ஸீரோ என்றால் என்ன
டே - ஸீரோ என்பது தண்ணீர் பஞ்சத்தின் அதிகபட்ச நிலையாகும். ஒருநாட்டில் இருக்கும் தண்ணீர் வளமும் பயன்படுத்தப்பட்டு, மீதம் இருக்கும் சேமிப்பு நீர் மட்டுமே ஒரே வழி என்ற நிலை வருவதுதான் டே - ஸீரோ ஆகும்.
இந்த நிலைதான் தற்போது அங்கு ஏற்பட்டு இருக்கிறது.
|
மக்கள் அவதி
இந்த நிலை வந்தால் மக்கள் மழை வரும் வரை தண்ணீர் கிடைக்கக் காத்து இருக்க வேண்டும். அங்கு இருக்கும் எல்லா வீடுகளிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. எல்லோரும் வீதியில் இறங்கி பொது இடங்களில் தண்ணீர் பிடிக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த போலீசும், ராணுவமும் இருக்கிறது.
|
மோசமான கட்டுப்பாடு
அந்த நகரத்திற்கு தற்போது 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதில் கால் வாசி கூட இப்போது இல்லை. இதனால் தனி நபர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 87 லிட்டரில் இருந்து 50 ஆகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குளிக்க, குடிக்க, சமைக்க எல்லாம் சேர்த்துத்தான்.
|
காலாவதி ஆகும்
கடந்த மூன்று வருடமாக அங்குக் கொஞ்சம் கூட மழை இல்லை. இதே நிலையில் தொடர்ந்தால் இந்த மே மாசம் தண்ணீர் மொத்தமாக காலியாகும். சரியாக மே 11ம் தேதி கடைசி நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது.
|
என்ன செய்வார்கள்
தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அங்குச் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிந்துவிட்டது. இது தினமும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்கும். ஆனால் அதுவும் செயல்பட இன்னும் 60 நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications