ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் அணிதிரளும் 34 இஸ்லாமிய நாடுகள்!!
ரியாத்: உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் எகிப்து, துருக்கி உள்ளிட்ட 34 இஸ்லாமிய நாடுகள் அணிதிரள உள்ளன. இருப்பினும் இந்த கூட்டணியில் ஈரான் இடம்பெறவில்லை.
சிரியா, ஈராக்கின் பெரும்பகுதியை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ். இயக்கம். அத்துடன் பிற மதத்தினர், வெளிநாட்டினரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்வதையும் அரங்கேற்றி வருகின்றனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன.
சர்வதேச சமூகத்தின் இந்த கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து பாரீஸில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். அதேபோல் ரஷ்யாவின் பயணிகள் விமானத்தையும் வெடிகுண்டு மூலம் தகர்த்தது. இந்த சம்பவங்களில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் புதிய திருப்பமாக ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கை கோர்த்துள்ளன. செளதி அரேபியாவின் தலைமையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா பிராந்தியங்களைச் சேர்ந்த 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இருப்பினும் இந்த கூட்டமைப்பில் இஸ்லாமிய நாடான ஈரான் இடம்பெறவில்லை.
இது குறித்து செளதி பாதுகாப்புத்துறை அமைச்சரான இளவரசர் முகமது பின் சல்மான் அல் செளத் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளின் பிரதான பிரச்சனையே பயங்கரவாதம்தான்... இதை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.
இந்தோனேசியா உள்ளிட்ட மேலும் 10 இஸ்லாமிய நாடுகள் செளதி அரேபியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
செளதியின் இந்த அணியில் துருக்கி, எகிப்து, லிபியா, ஏமன், மாலி, சாட், சோமாலியா, நைஜீரியா, மாலத்தீவு, பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதாவது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகள் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான செளதி தலைமையில் அணியில் இணைந்திருக்கின்றன. ஈரானுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிரியாவும், ஈராக்கும் இந்த கூட்டணியில் இடம்பெறவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications