தென்கொரியாவில் ரயில் விபத்து – 170 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சியோல்: தென்கொரிய தலைநகர் சியோலில் சுரங்க ரயில்கள் மோதிக்கொண்டதில் 170 பேர் காயம் அடைந்தனர்.
சியோலின் கிழக்குப் பகுதியில் உள்ள சங்வாங்சிம்னி ரயில் நிலையத்தில் இருந்து இன்று ஒரு ரயில் புறப்பட்டது. அப்போது, பின்னால் இருந்து வந்த மற்றொரு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் 170 பேர் காயம் அடைந்தனர். யாருக்கும் பலத்த காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சுரங்கப்பாதை கார் தடம்புரண்டதால் அதில் இருந்து பொதுமக்கள் கீழே குதித்து தண்டவாளம் வழியாக ரயில் நிலைத்திற்கு நடந்து சென்றதால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தென்கொரிய உல்லாச படகு கவிழ்ந்து 300 பேர் கடலில் மூழ்கிய 2 வாரத்திற்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டிருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications