போர்க்குற்றம்: இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர் போராட்டம்!!
ஜெனீவா: இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக் கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இறுதி யுத்தத்தில் சர்வதேச போர்விதிகளை மீறி ரசாயனக் குண்டுகளை பயன்படுத்தியது இலங்கை; வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்தவர்களை சுட்டுப் படுகொலை செய்தது; பெண்களை பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் அண்மையில் விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
இதில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது உண்மை என்றும் இது குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனால் இந்த யோசனையை இலங்கை ஏற்க மறுத்துவருகிறது. இந்த நிலையில் தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 30-வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரிக்க வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்து உள்ளது. இதில் பெரும்பாலான அம்சங்கள் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனிடையே இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜெனீவா நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியின் முடிவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்தபடியே முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அலுவலகப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications