தொடரும் அமெரிக்க தாக்குதல்.. காபூல் ஏர்போர்ட் அருகே தீவிரவாதிகளின் வெடிகுண்டு நிரப்பிய கார் தகர்ப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை குறி வைத்து அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு காபூல் விமான நிலையத்தை மீண்டும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதால் அமெரிக்கா இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்கா நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததாகவும், அதில் குழந்தைகள் உட்பட பலர் பலியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாலிபான்கள்
காபூல் விமான நிலையத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். விமான நிலையத்தின் மூன்று கேட்களை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளியேறும் மக்கள்
மேலும் காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து தலிபான்கள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாட்டை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் காபூல் விமான நிலையத்தை சுற்றிலும் உள்ள, முகாம்களில் தங்கியுள்ளனர்.

ட்ரோன் தாக்குதல்
காபூலில் சில தினங்கள் முன்பு ஏர்போர்ட் அருகே நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகினர். இதற்கு பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு. எனவே அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை குறி வைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர்
இதனிடையே அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு அதிபர் ஜோ பிடன் அஞ்சலி செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் டென்வர் மாகாணத்திலுள்ள டோவர் விமானப்படைத் தளத்துக்குச் தனது மனைவி ஜில் பைடனுடன் சென்ற அவர் மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமெரிக்க தகவல்
"அமெரிக்க ராணுவப் படைகள் இன்று காபூலில் ஒரு வாகனத்தின் மீது தற்காப்புக்காக ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியது, [ஹமீத்] கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு ISIS-K அமைப்பால் ஏற்படவிருந்த அச்சுறுத்தலை இந்த தாக்குதல் நீக்கியது. நாங்கள் இலக்கை வெற்றிகரமாக தாக்கினோம். வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளன" என்று அமெரிக்க மத்திய செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் கூறினார். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications