ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாயும் அருவி.. கனூன் புயலால் சீனாவில் அரங்கேறிய அதிசயம்!
சீனாவில் கனூன் புயலால் அருவி ஒன்று ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
குவாங்டாங்: சீனாவில் கனூன் புயலால் அருவி ஒன்று ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
சீன கடற்பகுதியில் உருவான கனூன் புயல் நேற்று அதிகாலை குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
கனூன் புயலால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் உடடினயாக கரை திரும்ப வேண்டும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

கால நிலையை வரையறுக்கும் நிறங்கள்
சீனாவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மற்றும் நீளம் ஆகிய வண்ணங்களை கொண்டு காலநிலைகளை வரையறுக்கப்படுவது வழக்கம். மிகவும் மோசமான நிலையை சிவப்பு நிறம் குறிக்கும்.

ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இரண்டாவது மோசமான நிலையை ஆரஞ்சு நிறம் குறிக்கும். இந்நிலையில் மோசமான நிலையை குறிக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சீன வானிலை மையம் கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுத்தது.

புயலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
இந்நிலையில் நேற்று புயல் கரையை கடந்துள்ளது. இதனால் பலத்த காற்று வீசியதால் ஹாங்காங்கில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
|
விமான சேவை பாதிப்பு
ஹாங்காங் வழியாக மக்காவ் மற்றும் அதன் அருகிலிருக்கும் தீவுகளுக்கு செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தைவான் மற்றும் சீனாவிற்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேல்நோக்கி பாய்ந்த அருவி
இந்நிலையில் தைவான் மலைப்பகுதியில் கனூன் புயல் காரணமாக அருவி ஒன்று உருவானது. ஆனால் அந்த அருவி வழக்கம்போல் கீழ்நோக்கி கொட்டாமல் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாய்ந்தது.

மேலே செல்வது முதல் முறையல்ல
இந்த போட்டோ வெளியாகியுள்ளது. இருப்பினும் புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து அருவிகள் மேல் நோக்கி பாய்வது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு இதுபோல் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications