ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் சப்ளை- 'யு.எஸ்.'வார்னிங்'! ஏடன் வளைகுடாவில் பதற்றம்!!
சானா: ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ஈரான் அனுப்பி வைத்திருக்கும் ஆயுதக் கப்பல்களை வழிமறிக்கும் வகையில் 9 போர்க் கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிபர் ஹதி ஆதரவு படைகளை எதிர்த்து ஈரானின் ஆதரவோடு ஷியாப் பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு அந்நாட்டில் முன்னேறி வருகின்றனர். பல நகரங்களை அவர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

ஏமன் அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவு மக்கள் அதிகம் நிறைந்த செளதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகளின் படைகள் போர் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் 26-ஆம் தேதியில் நடந்து வரும் கடுமையான போரில் இதுவரை சுமார் 700 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 3000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நாட்டின் பெரும்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர்.
அங்கு வான் தாக்குதலை நிறுத்துவதாக செளதி அரேபியா இன்று அறிவித்துள்ளது,. இதனிடையே ஏமனில் நிலைமையை மோசமாக்கி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அண்மையில் ஹவுத்தி படையினருக்கு ஆயுதம் வழங்குவதற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஈரானை எதிர்த்து வந்த நிலையில் அமெரிக்காவின் 9 போர்க் கப்பல்கள் ஏமன் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அந்நாடு அறிவித்துள்ளது. இதில் ரூஸ்வெல்ட் என்ற பிரம்மாண்ட போர்க்கப்பலும் அடங்கும். 60 போர்க் கப்பல்களுடன் மொத்தம் 5 ஆயிரம் வீரர்களை தாங்கிச் செல்லக் கூடியது ரூஸ்வெல்ட் போர்க்கப்பல்.
சவுதி அரேபிய படைகள் நடத்திய போருக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு நேரடி உதவியை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை. தற்போது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஈரான் அரசு ஹவுத்தி படைகளுக்கு வழங்கி வருவதை கண்காணிக்கும் விதமாக நவீன போர் கப்பல்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளது.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் ஈரானுடன் நேரடியாக அமெரிக்கா மோதுகிறது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புதுறை அதிகார் கர்னல் ஸ்டீவ் வாரன் கூறும்போது, "ஏமன் கடலை நோக்கி தியோடர் ரூஸ்வெல்ட் புறப்பட்டது. ஏடன் துறைமுகத்துக்கு நுழையும் ஈரான் கப்பல்களை இந்த கப்பல் கண்காணித்து தடுத்து நிறுத்தும்" என்றார். இதனால் ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.
-
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications