நோ ஃப்ளை ஜோன்..உக்ரைனுக்கு ஆதரவளித்தால் ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதாக அர்த்தம் - கொந்தள்ளித்த புதின்
மாஸ்கோ: உக்ரைன் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்க முயற்சித்தால், அவர்கள் ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிவதாகவே அர்த்தம் என ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. பத்து நாட்களுக்குப் பிறகு, மீட்புப் பணிக்காக போரை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது ரஷ்யா.
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

பொருளாதார தடை
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் செயல்பட்டன. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா ஆதரவாக இருக்கிறது. நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்தன. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி வருகின்றன. ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தின.

ரஷ்யா
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமுல்படுத்துவதற்கான நாடுகளின் முடிவு, போர்ப் பிரகடனத்திற்கு நிகரானது. அதேபோல், யாராவது உக்ரைன் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்க முயற்சித்தால், அவர்கள் இந்த மோதலில் பங்கேற்பதாக கருதப்படும் என புடின் எச்சரித்துள்ளார். அதேசமயம், ரஷ்யாவில் ராணுவ சட்டம் அல்லது அவசர நிலை அறிமுகப்படுத்தப்படாது என ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ
உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை என நேட்டோ அறிவித்தால் பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எவ்வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக் கூடாது.

விமானம்
இது ரஷிய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். தடையை மீறும் எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம். ஆனால், உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில், தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications