அணுமின் நிலையங்களை குறி வைக்கும் உக்ரைன்.. திடீர் ட்ரோன் தாக்குதலால் பதற்றம்! ஐநா எச்சரிக்கை
மாஸ்கோ: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பல முறை உக்ரைனை எச்சரித்தது. இருப்பினும் உக்ரைன் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதுவே போருக்கான தொடக்கப்புள்ளி.. இப்படி தொடங்கிய போர் ஓராண்டு கடந்த பின்னரும் நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதலை நடத்தியிருப்பது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் இந்த மிகப் பெரிய அணுமின் நிலையம் தொடக்கத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியபோது, ரஷ்ய ராணுவம் இதனை கைப்பற்றியது. உக்ரைனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், இந்த அணுமின் நிலையத்திலிருந்துதான் கணிசமான அளவு மின்சாரம் உக்ரைனின் கிழக்கு பகுதிகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், ரஷ்யா இதை கைப்பற்றிய பின்னர் இந்த பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டது.
எனவே, நீண்ட நாட்கள் குறி வைத்திருந்து தற்போது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா ட்ரோன் தாக்குதலுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், உடனடியாக பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இல்லையெனில் அணு கதிர்வீச்சு ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐநா அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்திருக்கின்றனர்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உக்ரைனின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த விளக்கத்தில், “இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஷ்யாவே இப்படியான தாக்குதலை நடத்திவிட்டு பழியை எங்கள் மீது போடுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல்கள் அரை மணி நேர இடைவெளியில் நடந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதல் தாக்குதல் கேன்டீன் பகுதியிலும், இரண்டாவது தாக்குதல் அணுமின் உலை இயங்க தேவையான சரக்குகளை வைக்கும் பகுதியிலும், மூன்றாவது தாக்குதல் கட்டிடத்தின் மேற் பகுதியிலும் நடந்ததாக கூறியுள்ளனர். மேலும், உக்ரைனின் தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும், அமெரிக்காவின் ஆயுத உதவியால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications