“ஐ ஆம் ரஷ்யன் சாரி உக்ரைன்”..மனிதநேயத்துடன் ரஷ்ய மக்கள்..காது கொடுக்காத புடின்.. எண்டே இல்லையா சார்?
கீவ் : தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வருகிறது எனவும், 2வது நாளாக உக்ரைன் மீதான போரை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும் வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான 2ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.
தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைனுடனான போருக்கு எதிராக ரஷ்யாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் கைது செய்யப்பட்ட நிலையி;ல், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ‛‛உக்ரைன் நமக்கு எதிரியில்லை'' என மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இருந்து 2வது நாளாக தாக்குதலை தொடங்கியுள்ள ரஷ்யா கீவ் நகரை கைப்பற்ற முயன்று வருகிறது.

உக்ரைன் ராணுவம் பதிலடி
தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வருகிறது. போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் ரஷ்யாவின் 30 டாங்கிகள், 7 விமானங்கள், 60 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அதிபர் வேதனை
ரஷ்ய படைகள் என் மீது குறிவைத்து உக்ரைன் தலைநகரில் நுழைந்துள்ளது எனவும், என்னை அழித்தால் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா நினைக்கிறது என கூறியுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வருகிறது எனவும், 2வது நாளாக போரை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என்ன நடந்தாலும் உக்ரைனை விட்டு வெளியேறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மன்னிப்பு கேட்கும் ரஷ்யா
உக்ரைன்மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கைவிட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டுவிட்டரில் #saveuukraine என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ரஷ்ய மக்களும் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். ஐ அம் ரஷ்யன் சாரி உக்ரைன் என்ற பதாகையுடன் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications