ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.. ஐநாவில் வைகோ மனு
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐநா அவையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவா: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பங்கேற்றுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய அவரை சிங்களர்கள் தாக்க முயன்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐநா சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் தலைவரிடம் அவர் மனு அளித்துள்ளார்.

அதில் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதியன்று, மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனத்தின்படி, உலகில் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளும், குறிப்பாக சுய நிர்ணய உரிமையும் உண்டு என்பதாகும். இந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஐ.நா சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications