இஸ்லாமியர்களை அவமதித்ததாக மலேசிய எதிர்க்கட்சி பெண் எம்.பி. மீது தேசதுரோக வழக்கு
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: இஸ்லாமியர்களை கேலி செய்யும் வீடியோவில் தோன்றிய எதிர்க்கட்சி பெண் எம்.பி தெரேசா கோக் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது மலேசியா.

மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் துணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் தெரசா கோக். கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட 'ஒன்டர் ஃபுல் மலேசியா' என்ற வீடியோவில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் தெரசா கோக் பேசியதாக மலேசிய அரசு தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை நாட்டில் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் ஒரு செயல் என்று தெரசா கோக் கூறுகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி பெற்றதன் காரணமாகவே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் தெரசா கோக் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications