நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எப்போது?.. "வாரிசு" குறித்து பேசிய ஷோபா சந்திரசேகர்
காஞ்சிபுரம்: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த அவரது தாய் ஷோபா சந்திரசேகரன் கருத்து தெரிவித்துள்ளார். வாரிசு குறித்தும் அவர் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தை பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.

உலக மக்கள் நன்மை பெற வேண்டி
அப்போது அவர் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். சுவாமி தரிசனம் தெய்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஷோபா கூறுகையில் அனைவரையும் போல் நானும் சாமி கும்பிட வந்துள்ளேன். அப்போது அவர் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். சுவாமி தரிசனம் தெய்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஷோபா கூறுகையில் அனைவரையும் போல் நானும் சாமி கும்பிட வந்துள்ளேன்.

விஜய்யின் வாரிசு
விஜய் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டுள்ளேன். என்னை போல் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள். விஜய்யின் வாரிசு படம் குறித்தும் அவரது அடுத்த படம் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. நானும் ரசிகர்களை போல் ஆவலாக உள்ளேன். படம் வந்தவுடன் அனைவரும் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு எப்போது வருவார்
விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என கேட்கிறீர்கள். அதை நான் சொல்ல முடியாது. அது எல்லாமே அவருடைய முடிவுதான். நானும் அவரது தந்தை எஸ்ஏசியும் எந்த விஷயத்துலையும் தலையிடுவதில்லை என ஷோபா சந்திரசேகர் கூறிவிட்டு சென்றார். நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

81ஆவது பிறந்தநாள்
கடந்த ஜூலை மாதம் எஸ்ஏ சந்திரசேகரின் 81 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் விஜய் வரவே இல்லை. எஸ்ஏசி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்களில் ஷோபா மட்டுமே இருந்தார். அவர் மட்டுமே கணவருக்கு கேக் ஊட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விஜய், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்துவிட்டு தனது சொந்த தந்தையிடமே இப்படியா நடந்து கொள்வது என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications