9 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு.. காமக்கொடூர மீனவர் கைது.. குமரியில் பகீர்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவன் சைமன்(48). மீனவர். இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவனை பல நாட்களாக மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி தனியாக வரும்படி அழைத்துள்ளான்
இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளான். இந்த நிலையில் இன்று மாலை சிறுவன் வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு நின்று கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த சைமன் சிறுவனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கடத்தி சென்று அருகில் உள்ள ஒரு தோப்பிற்குள் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இது சம்பந்தமாக சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துகொண்டு கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ள சைமன் தனக்கு பல நாட்களாக இந்த சிறுவன் மீது ஆசை இருந்ததாகவும் இதனால் சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications