பித்தரை சித்தராக மாற்றி.. கல்லா கட்டிய கரூர் கும்பல்! இப்போ ஆளே மாறி எப்படி இருக்கார் பாருங்களேன்!
கரூர் : கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலையில் மனநலம் பாதித்த நபரை கடந்த 4 மாதங்களாக நெடுஞ்சாலை சித்தர் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி வசூல் செய்தவர்களிடம் இருந்து மீட்டுள்ள நிலையில், தற்போது நலமடைந்த அவர் காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக சுப்பிரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு உடைகள் அணியாமல் மனநலம் பாதித்து நிர்வாணமாய் சுற்றி திரிந்து வந்தார்.
சாலையில் வருவோர் போவோரிடம் யாசகம் எடுத்து உணவருந்தி, தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்து வந்துள்ளார்.

நிர்வாண சித்தர்
இந்நிலையில் சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணி மனையில் நேரக் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். சுப்பிரமணியிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நெடுஞ்சாலை சித்தர் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியும், சமூக வலைதளம் மூலமாக வதந்தியை பரப்பியுள்ளனர் சில மர்ம நபர்கள்.

திடீர் சாமியார்
மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார். அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்திருந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இவரை காண்பதாக அப்பகுதியினர் கூறினர்.

பணம் வசூல்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சித்தர் ஒருவர் நிர்வாணமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதாக தகவல்கள் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கில் இவரை பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவரை வைத்து நாகம்பள்ளியை சேர்ந்த செல்லமுத்து மற்றும் நித்தியா என்பவரும் மற்றும் ஓரிருவர்கள் சேர்ந்து பொதுமக்களிடம் ஏமாற்றி உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வருகிறார்கள் என புகார் எழுந்தது.

மீட்பு
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

குணமடைந்தார்
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வைத்து மோசடி கும்பல் ஆயிரக்கணக்கில் உண்டியல் பணத்தையும், கோவில் கட்ட வேண்டும் என பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுப்பிரமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 15 நாள் சிகிச்சைக்கு பின்பு அவர் பூரண குணம் அடைந்தார். இதனையடுத்து சுப்பிரமணியை தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications