வந்ததே லேட்! இதுல ராங் ரூட் வேற! கேரவனுக்குள் விஜய் சென்றதால்தான் கூட்டம்.. டிஎஸ்பி விளக்கம்
கரூர்: கரூரில் பிரச்சாரத்திற்கு வந்த பிரச்சார வாகனம் ராங் ரூட்டில் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் டிஎஸ்பி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பரப்புரை இடம் வந்ததும் ஆதவ் ஆர்ஜுனாதான் இன்னும் முன்னேறிச் செல்லலாம் என்றார் என்றும் டிஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று காலை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி பரத்குமார், " 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எதை வைத்து கூறினீர்கள், விஜய்யை பார்க்க குழந்தைகள் வருவார்கள். மேலும் வார விடுமுறை, காலாண்டு விடுமுறை என்பதால் எப்படி குறைந்த அளவு கூட்டம் வரும் என கணக்கிட்டீர்கள். அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம், விஜய்யை பார்க்க அனைத்து தரப்பும் வருவார்கள். இதை ஏன் நீங்கள் (தவெக) முன் கூட்டியே கணிக்கவில்லை " என கேள்வி எழுப்பினார்.
மேலும் நீதிபதி, அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா. அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள். தவறு யார் மீது உள்ளது என சொல்லுங்கள் என நீதிபதி கேட்டார்.
இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி செல்வராஜ் கூறுகையில், "தவெக கேட்ட லைட் ஹவுஸ் பகுதியில் ரயில்வே பாலம் இருப்பதால் அனுமதி தரவில்லை. மேலும் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் அன்று மார்க்கெட் பகுதிக்குள் அதிக மக்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.
விஜய் நேரத்தை கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்ததும் நான் போதும் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் "இன்னும் முன்னே செல்வோம்" என்றார்.
அது போல் முனுசாமி கோயில் பகுதியில் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். விஜய்யின் பரப்புரை வாகனம் ராங் ரூட்டில் சென்றது. கரூர் மேம்பாலத்தில் வரும்போதே வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். முனியப்பன் கோயில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார். அங்கேயே விஜய்யை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். இவ்வாறு கரூர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications