சசிகலா அதிமுகவில் இணைப்பா.. ஒரு சாதிக்கு கட்சி சொந்தமானால் இறந்துவிடுவேன்: கேபி.முனுசாமி ஆவேச பேட்டி
கிருஷ்ணகிரி: சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவு என்று சொன்னால் முனுசாமி இறந்து விடுவதாக அர்த்தம் என்று அவர் ஆவேசமாக கூறினார்.
Recommended Video
மதுரையில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வது பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தலைமை கழக உறுப்பினர்கள் இதுபற்றி முடிவு செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இது சர்ச்சைக்கு காரணமாக மாறியது. ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காட்டமாக தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி நகரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி ஏழை,எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்வார்கள் என தெரிவித்திருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்து முனுசாமி கூறியதாவது:

வாய்ப்பு இல்லை
ஏற்கனவே தெளிவாக முடிவு எடுக்கப்பட்டு விட்டது. கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக, கேள்வி எழவில்லை. சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் பலர், ஓபிஎஸ், இபிஎஸ் மூலம் நீக்கப்பட்டுள்ளனர். எந்த சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு கிடையாது. முடிந்த ஒரு விஷயத்திற்கு ஊடகங்கள் கமா போட்டு மீண்டும் தொடர்ந்து வருகிறது.

தலையீடு செய்ய கூடாது
சசிகலா அவர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றி பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்தபோது கட்சியில் எந்த தலையீடும் செய்ய மாட்டேன். அக்காவிற்கு சேவை செய்ய மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் தலையிட்டு வருவது சசிகலா, வியாபார ரீதியாக இருந்தாரா என்பதை காட்டுகிறது.

கருணாநிதி கொள்கை
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தனக்கென்று ஒரு கொள்கை கொண்டு அவரது குடும்பம் இந்த இயக்கத்தை கையில் எடுக்கும் நிலைக்கு கொண்டு போனார். எம்ஜிஆர் அவர்கள், அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை தொடங்கி அண்ணாவின் உண்மையான தொண்டர்களையும் அவரது சிந்தனை கொள்கைகளை காப்பாற்றினார். அன்றைக்கு சாதி, மதம் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எதுவுமில்லை. அண்ணாவின் கொள்கைகளை மட்டுமே முன்வைத்து தியாக வேலி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

இறந்து விட்டதாக அர்த்தம்
இப்படிப்பட்ட இந்த இந்த இயக்கம் குறிப்பிட்ட சாதிக்கும் சமூகத்திற்கும் ஆதரவு என்று சொன்னால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்துவிடுவார்கள். அதேபோல சாதாரண தொண்டனாக கேபி முனுசாமியாக நானும் இறந்துவிடுவேன் என்று அர்த்தம். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்திலும், உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டு முகத்துடன் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டுமானால் ஒருமுகமாகவே செயல்பட வேண்டும். திமுகவின் செயல்பாடுகளுக்கு இடையேயும், எதிர்க்கட்சியான அதிமுக அமைதியாக உள்ளதென்றால், அவர்கள் மக்களுக்கு எதாவது செய்வார்கள் என்றுதான் பொறுமை காக்கிறோம். இவ்வாறு முனுசாமி தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications