ஓமிக்ரான் ஆபத்தானது என்பதற்கு ஆதாரம் இல்லை… நம்பிக்கை அளிக்கும் சிங்கப்பூர்..!
கோலாலம்பூர்: ஓமிக்ரான் வைரஸ் கொரோனாவின் மற்ற திரிபுகளை விட மாறுபட்டது அல்லது அதிக ஆபத்தானது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என சிங்கப்பூர் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது ஓமிக்ரான் வைரஸ். இதனால் பல்வேறு நாடுகளும் ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்த ஆரம்பித்துள்ளன நிலையில் சிங்கப்பூர் அரசு அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
சிங்கப்பூர் அரசு தற்போது அங்கு படிப்படியாக பல்வேறு தரவுகளை அறிவித்து வருகிறது, இந்நிலையில் ஓமிக்ரான் காரணமாக நாட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி வேண்டாம் எனவும் மக்களை குழப்ப நிலைக்கு ஆளாக்க அந்நாட்டு அரசு விரும்பவில்லை என்பதால் நிதானமான முடிவெடுத்து செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா சோதனையை சிங்கப்பூர் அரசு கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், வெளிநாடு செல்வோருக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி இருந்தது. நிலையில் தற்போது அதை மட்டும் நிறுத்தி கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்துள்ளது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூர் டியூப் எம்யுஎஸ் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் செயின்ட் ஜான் இதுகுறித்து கூறும்போது. ஓமிக்ரான் பீதி ஏற்படுத்தக் கூடிய வகையிலான வைரஸாக தெரியவில்லை எனவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் நிதானமாகத் தான் முடிவெடுக்க வேண்டும், பயண கட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே புதிய வகை வைரஸ் தடுத்துவிட முடியும் என தெரியவில்லை என்றார்..

ஆதாரம் இதுவரை இல்லை
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள சேனல் நியுஸ் ஏசியா, ஓமிக்ரான் வைரஸ் கொரோனாவின் மற்ற திரிபுகளை விட மாறுபட்டது அல்லது அதிக ஆபத்தானது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை எனவும், தற்போதைய தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் புதிய மாறுபாட்டிற்கு எதிராக பயனற்றதாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

கூடுதல் தகவல்கள் ஆய்வு தேவை
ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சிங்கப்பூர் வழியாக மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், வரும் வாரங்களில் உலக அளவில் இது போன்ற ஓமிக்ரோன் பாதிப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுகுறித்த கூடுதல் தரவுகள் மற்றும் ஆய்வுகள் இன்னும் தேவை என கூறியுள்ளது.
Recommended Video

தடுப்பூசி பூஸ்டர் திட்டம்
ஓமிக்ரான் மாறுபாடு டெல்டாவை விட அதிக அளவில் பரவக் கூடிய தாகவும் காலப்போக்கில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாற வேண்டிய நிலையில் சிங்கப்பூரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது நேரத்தைப் பொறுத்தே அமையும் என சிங்கப்பூர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே சிங்கப்பூரில் சுமார் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் ஓமிக்ரான் மாறுபாட்டுக் எதிராக சிறந்த பாதுகாப்பை மக்களுக்கு வழங்க தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தையும் தொடர இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளன..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications