அடேங்கப்பா! சைக்கிள் மலை தெரியுமா? - 500 சைக்கிள்களை திருடி குவித்து வைத்த 54 வயது கொள்ளையன் கைது
லண்டன்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நகரில் 500க்கும் மேற்பட்ட சைக்கிள்களை திருடி தனது வீட்டின் பின் பகுதியில் மலைபோல் குவித்து வைத்திருந்த 54 வயது கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சிலருக்கு சில விதமான பொருட்களை சேகரிப்பது பிடிக்கும். சிலர் நாணயங்களை சேகரிப்பார்கள். சிலர் பழங்கால பொருட்களை சேகரிப்பார்கள். சிலர் ஓவியங்களை சேகரிப்பார்கள்.
இந்திய முன்னாள் கேப்டன் தோனி கூட தனக்கு பிடித்தமான ஏராளமான பைக்குகளை சேகரித்து வருகிறார். இவர்கள் எல்லாம் சொந்த பணத்தை செலவு செய்து பிடித்த பொருட்களை சேகரிக்கிறார்கள்.

திருட்டு சைக்கிள்கள் சேகரிப்பு
ஆனால், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பகுதியை சேர்ந்த 54 வயது முதியவர் தனது வீட்டின் பின்புறம் அமைந்திருக்கும் தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சைக்கிள்களை மலைபோல் சேகரித்து வைத்துள்ளார். வீடுகள், கடைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களை அவர்களுக்கு தெரியாமல் நைசாக ஓட்டி வந்து வீட்டின் பின்புறம் குவித்து வைப்பது இவரது வாடிக்கை.

எலி தொல்லையால் வந்த பிரச்சனை
தொடர்ந்து சைக்கிள்களை திருடி வீட்டின் பின்புறம் வைத்ததால் 5 ஆண்டுகளில் அது மலைபோல் குவியத் தொடங்கி இருக்கிறது. இதனை அண்டை வீட்டாரும் சந்தேகத்துடன் பார்த்திருக்கின்றனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள வீடுகளில் எலி தொல்லை அதிகரித்துள்ளது. இந்த சைக்கிள் மலை காரணமாகவே எலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகக்கூறி அவற்றை அகற்ற சொல்லி இருக்கின்றனர் அண்டை வீட்டார்.

உருக்கமான காரணம் சொன்ன கொள்ளையன்
அவர்களிடம் ஆப்பிரிக்காவில் வாழும் ஏழை எளிய குழந்தைகளுக்காகவே சைக்கிள்களை சேகரித்து வைத்து இருப்பதாகவும், விரைவில் ஆப்பிரிக்காவுக்கு சைக்கிள்களை அனுப்பிவிடுவேன் என்று என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக சில காலம் தாங்கள் அமைதியுடன் இருந்ததாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அந்த சைக்கிள்கள் இதுவரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்கின்றனர்.

இரண்டாவது முறையாக கைது
சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 54 வயது நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து இருக்கிறார். 5 ஆண்டுகளாக இதுபோன்ற சைக்கிள்களை திருடி சேகரித்து வந்ததால் அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படவே அவர்கள் போலீசாரை நாடியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்குசென்ற போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூகுள் மேப்பில் தெரியும் திருட்டு சைக்கிள்கள்
கைதான நபர் திருடி குவித்து வைத்திருக்கும் சைக்கிள் மலை, கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் செயலிகளில் தென்படும் படங்களும் வெளியாகி இருக்கின்றன. போலீசாரின் இந்த கைது நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து இருக்கும் அப்பகுதி மக்கள், இனி தாங்கள் நிம்மதியாக இருப்போம் என்றும், அவர் திருடிய சைக்கிள்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications