இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்
லண்டன்: இந்தியாவில் முதல் கண்டறியப்பட்ட B 1.617.2 உருமாறிய கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகளின் செயல்திறன் குறையலாம் என்று பிரிட்டன் நாட்டின் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு இறுதி முதலிலேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பிரிட்டன் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

எச்சரிக்கை தேவை
இது குறித்து தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அந்தோனி ஹார்ண்டன் கூறுகையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. எனவே, பிரிட்டன் நாட்டில் ஊரடங்கில் மிகவும் எச்சரிக்கையுடன் தளர்வுகளை அறிவிக்க வேண்டும்.

தடுப்பூசி செயல்திறன் குறையும்
அதேநேரம் 1.617.2 உருமாறிய கொரோனா தீவிரமான பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. கொரோனா தடுப்பூசிகள் லேசான உருமாறிய கொரோனா பாதிப்புகளுக்கு எதிராகக் குறைவான செயல்திறனைக் கொண்டிருக்கலாம். ஆனால், எந்த உருமாறிய கொரோனாவாக இருந்தாலும் தீவிர பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும். அதேநேரம் தடுப்பூசி செயல்திறன் குறைவதால், வைரஸ் பரவலைத் தடுப்பூசிகளால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்" என்று அவர் தெரிவித்தார்.

போரிஸ் ஜான்சன்
முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இதே கருத்தையே முன் வைத்திருந்தார். அவர் கூறுகையில், "இந்த 1.617.2 உருமாறிய கொரோனா வேகமாகப் பரவுகிறது. இருப்பினும், எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவை தடுப்பூசிக்குக் கட்டுப்படும் என்றே தற்போது வரை வெளியான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அதிகளவிலான மக்களுக்கு நாம் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்" என்றார்.

பிரிட்டன் கொரோனா பாதிப்பு
கடந்த வாரம் பிரிட்டன் நாட்டில் 520 பேருக்கு மட்டுமே இந்த 1.617.2 உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்த எண்ணிக்கை 1,313ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தின் வட மேற்கு பகுதிகளிலும், லண்டன் பகுதிகளிலும் 1.617.2 உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications