அடுத்த ஆண்டு 3ம் உலகப்போர் வெடிக்கும்.. ஹிட்லரின் எழுச்சியை முன்பே கூறிய ஜோதிடரின் பகீர் கணிப்பு
லண்டன்: 2023ம் ஆண்டு தொடர்பாக 16ம் நூற்றாண்டின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள கணிப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு 3ம் உலகப்போர் வெடிக்கும் என அவர் கணித்துள்ளார்.
1503ம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இவர் தெற்கு பிரான்சில் பிறந்தார். அதன்பிறகு 1566 ஜூலை 2ம் தேதி இறந்தார். இவர் எதிர்கால உலகம் இப்படித்தான் இருக்கும் என மொத்தம் 6,338 கணிப்புகள் செய்து எழுதியுள்ளார்.
இதில் உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் கணிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவரது கணிப்புகள் என்பது காலத்துக்கு ஏற்ப ஒவ்வொரு கணிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மகாராணி மறைவு பற்றிய கணிப்பு
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் எழுச்சி இரண்டாம் உலகப்போர், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல், பிரெஞ்ச் புரட்சி உள்பட முக்கிய நிகழ்வுகளை நோஸ்ட்ராடாமஸ் துல்லியமாக கணித்துள்ளார். மேலும் அவரது கணிப்பின்படியே பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்துள்ளார். அந்த வகையில் தற்போது 2023ம் ஆண்டு தொடர்பாக அவர் கணித்துள்ள கணிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

3ம் உலகப்போர்
உலகில் மூன்றாம் உலகப்போர் 2023ல் நடக்கும் என கூறியுள்ளார். இது தற்போது உறுதியாகும் வகையில் உள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மேலும் சீனா-தைவான் இடையேயும் பதற்றமான சூழல் உள்ளது. இந்த விஷயங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இத்தகைய சம்பவங்கள் என்பது பதற்றமான சூழலை தான் தருகிறது. இதனால் தான் அவரது கணிப்புப்படி இந்த நிலவரங்கள் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன்
மேலும் செவ்வாய் கிரகம் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டில் மனிதர்கள் சிவப்பு கிரமான செவ்வாய்க்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் என அவர் கணித்துள்ளார். விண்வெளி துறையில் சாதனை படைத்துவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவரும் உலகின் முதல் பணக்காரருமான எலான்மஸ்க், 2029ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை செல்வார்கள் அனுப்பப்படுவார்கள் என கூறிய நிலையில் அவர் 2023ல் நிகழும் என கூறியுள்ளார்.

புதிய போப்
நோஸ்ட்ராடாமஸின் 3வது கணிப்பு என்பது 2023ம் ஆண்டில் புதிய போப் பதவிக்கு வருவார். போப் பிரான்சிஸ் தான் கடைசி உண்மையான போப் ஆவார். இனி வரும் நபர் ஊழலை உருவாக்குவார் எனவும் கணித்துள்ளார். முன்னதாக பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைவால் பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிறிது காலம் மட்டுமே இருப்பார் எனவும், விரைவில் அவர் தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் அவரது இளைய மகன் ஹாரி புதிய மன்னராக பொறுப்பேற்பார் என நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக பிரபல எழுத்தாளர் மரியோ ரீடிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications