அடுத்த ஆண்டு 3ம் உலகப்போர் வெடிக்கும்.. ஹிட்லரின் எழுச்சியை முன்பே கூறிய ஜோதிடரின் பகீர் கணிப்பு
லண்டன்: 2023ம் ஆண்டு தொடர்பாக 16ம் நூற்றாண்டின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள கணிப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு 3ம் உலகப்போர் வெடிக்கும் என அவர் கணித்துள்ளார்.
1503ம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இவர் தெற்கு பிரான்சில் பிறந்தார். அதன்பிறகு 1566 ஜூலை 2ம் தேதி இறந்தார். இவர் எதிர்கால உலகம் இப்படித்தான் இருக்கும் என மொத்தம் 6,338 கணிப்புகள் செய்து எழுதியுள்ளார்.
இதில் உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் கணிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவரது கணிப்புகள் என்பது காலத்துக்கு ஏற்ப ஒவ்வொரு கணிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மகாராணி மறைவு பற்றிய கணிப்பு
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் எழுச்சி இரண்டாம் உலகப்போர், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல், பிரெஞ்ச் புரட்சி உள்பட முக்கிய நிகழ்வுகளை நோஸ்ட்ராடாமஸ் துல்லியமாக கணித்துள்ளார். மேலும் அவரது கணிப்பின்படியே பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்துள்ளார். அந்த வகையில் தற்போது 2023ம் ஆண்டு தொடர்பாக அவர் கணித்துள்ள கணிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

3ம் உலகப்போர்
உலகில் மூன்றாம் உலகப்போர் 2023ல் நடக்கும் என கூறியுள்ளார். இது தற்போது உறுதியாகும் வகையில் உள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மேலும் சீனா-தைவான் இடையேயும் பதற்றமான சூழல் உள்ளது. இந்த விஷயங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இத்தகைய சம்பவங்கள் என்பது பதற்றமான சூழலை தான் தருகிறது. இதனால் தான் அவரது கணிப்புப்படி இந்த நிலவரங்கள் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன்
மேலும் செவ்வாய் கிரகம் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டில் மனிதர்கள் சிவப்பு கிரமான செவ்வாய்க்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் என அவர் கணித்துள்ளார். விண்வெளி துறையில் சாதனை படைத்துவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவரும் உலகின் முதல் பணக்காரருமான எலான்மஸ்க், 2029ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை செல்வார்கள் அனுப்பப்படுவார்கள் என கூறிய நிலையில் அவர் 2023ல் நிகழும் என கூறியுள்ளார்.

புதிய போப்
நோஸ்ட்ராடாமஸின் 3வது கணிப்பு என்பது 2023ம் ஆண்டில் புதிய போப் பதவிக்கு வருவார். போப் பிரான்சிஸ் தான் கடைசி உண்மையான போப் ஆவார். இனி வரும் நபர் ஊழலை உருவாக்குவார் எனவும் கணித்துள்ளார். முன்னதாக பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைவால் பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிறிது காலம் மட்டுமே இருப்பார் எனவும், விரைவில் அவர் தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் அவரது இளைய மகன் ஹாரி புதிய மன்னராக பொறுப்பேற்பார் என நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக பிரபல எழுத்தாளர் மரியோ ரீடிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications