40 நாளில் 90 பேர் மதமாற்றம்... உத்தர பிரதேசத்தில் 55 பேர் மீது வழக்கு... 26 பேர் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 40 நாளில் 90 பேரை கட்டாயமாக மதம்மாற்றிய புகாரில் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக தொடர்ந்து யோகி ஆதித்யநாத் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மாநிலங்களின் சில இடங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க போலீஸ் டிஜிபி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி போலீசார் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

போலீசில் புகார்
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் ஹரிஹர்கஞ்ச் பகுதியில் சர்ச் உள்ளது. இங்கு கட்டாய மதமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி ஹிமான்ஷூ தீக்சித் போலீசில் புகார் செய்தார். அதில், சர்ச் பெயரை குறிப்பிட்டு 0 நாளில் 90 பேரை மதமாற்றியுள்ளனர். தொடர்ச்சியாக கட்டாய மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

55 பேர் மீது வழக்கு; 26 பேர் கைது
இந்த புகாரின் அடிப்படையில் கோத்வாலி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைையை தொடர்ந்து சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் 10 பெண்கள் உள்பட 55 பேர் மீது கோத்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என துணை போலீஸ் சூப்பிரண்டு(எஸ்பி) தினேஷ் சந்திர மிஸ்ரா கூறினார்.

அடையாளம் காணும் பணி
மேலும் அவர் கூறுகையில், ‛‛ஹரிகஞ்ச் பகுதியில் உள்ள ‛இவாஞ்சிக்கல் சர்ச் ஆப் இந்தியா' மூலம் மதமாற்றம் நடந்ததாக புகார் வந்தது. தற்போது 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் 20 பேர் அடையாளம் காணப்பட வேண்டி உள்ளது'' என்றார்.

பிரச்ச்னை- பேச்சுவார்த்தை
முன்னதாக நேற்று மாலையில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்புகளை சேர்ந்த சிலர் சர்ச்க்கு சென்றனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications