வலியால் துடிக்கும் 3 மாத குழந்தை - சிகிச்சைக்கு பணமில்லாமல் கொலை செய்ய தாய் கைது
மருத்துவ சிகிக்சை செய்ய பணமில்லாமல் வலியால் துடித்த 3 மாத மகனை மாடியில் இருந்து வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் வறுமையில் வாடிய பெண் ஒருவர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை செய்ய பணல்லாமல் மகனின் வேதனை தாங்காமல் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து வீசி கொலை செய்திருக்கிறார். சிசிடிவியில் பதிவான
காட்சிகளை வைத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கொடிது கொடிது வறுமை கொடிது என்பார்கள். வறுமையோடு நோயும் வந்தால் வேதனை தாங்கமுடியாததுதான். இன்றைக்கு மருத்துவ செலவுகளுக்காக பல லட்சம் செலவாகிறது. மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தனது முன்று மாத பிள்ளையை வீசி கொன்றுள்ளார் ஒரு பெண். உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த தம்பதியருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலமில்லாமல் போனது.
குழந்தையை எடுத்துக்கொண்டு கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்றார் அந்த பெண். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மஞ்சள்காமாலை என்று சொன்னார்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் நிறைய செலவாகும் என்றும் கூறி விட்டனர்.
குழந்தையை வைத்துக்கொண்டு வேதனைப்பட்ட அந்த பெண் திடீரென அந்த குழந்தையை காணவில்லை என்று கூறி அழுதார். மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை தேடிப்பார்த்தனர். சிசிடிவி காட்சியில் தேடியபோது அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு போன ஒரு பெண் அதை மாடியில் இருந்து கீழே வீசியது தெரியவந்தது. அது யாரென்று பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையின் தாயே வீசி கொலை செய்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவரே தனது மனைவியின் செயலைப்பற்றி போலீசில் புகார் அளிக்கவே, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் பெற்ற தாயே தனது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications