"இது என்ன இந்து-முஸ்லீம் மேட்ச் நடக்கும் இடமா?'' பாஜகவை சாடிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த்
லக்னோ: முசாபர்நகர் இந்து முஸ்லிம் மேட்ச் நடக்கும் இடம் கிடையாது என உத்தரப்பிரதேச பாஜகவை சாடியுள்ளார், பாரதிய கிஸான் யூனியனின் ராகேஷ் திகாய்த்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

பாரதிய கிஸான்
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரசாரங்களையும் அவர்களின் தேர்தல் யுத்திகளையும் சாடியுள்ளார், சம்யுக்த கிஸான் மோர்ச்சாவின் ஒரு அங்கமான பாரதிய கிஸான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாய்த். ''முஸாப்பர்நகர் இந்து முஸ்லிம் மேட்ச் நடக்கும் இடம் கிடையாது'' என்று பாஜகவைப் பார்த்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஜாட் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதக்கலவரம் கடந்த 2013ம் ஆண்டு முஸாப்பர்நகரில் ஏற்கெனவே நடந்திருக்கிறது.

ராகேஷ் திகாத்
ராகேஷ் திகாய்த் இது குறித்து தன்னுடைய டிவிட்டரில் கூறியிருப்பதாவது, ''மேற்கு உத்தரப்பிரதேசம் வளர்ச்சி குறித்து பேச வேண்டும். ஆனால் தற்போது அவர்கள் இந்து, முஸ்லிம், ஜின்னா, மதம் குறித்து பேசி வருகிறார்கள். இதனால் அவர்கள் ஓட்டுகளை இழந்து வருகிறார்கள். விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
ராகேஷ் திகாய்த் மேலும் கூறுகையில், ''விவசாய மசோதாக்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை சோதனையாக்கியது. பின்னர் அதைத் திரும்பப் பெற்றது பாஜக. இந்த தேர்தலில் பாஜக விவசாயிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்கப்போகிறோம். பிரதமர் மோடி விவசாயிகள் குறித்து வாய் திறப்பதில்லை, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் குறித்தும் எதுவும் பேசவில்லை, அதுகுறித்துப் பேசுவதையே பிரதமர் தவிர்த்து வருகிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications