Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்சிஜன் இல்லாமல் யாரும் சாகவில்லை... இறப்பு சான்றிதழை பாருங்க... காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு யோகி அரசு பதில்

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனோ 2வது அலையின்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின்போது 22,915 பேர் உயிரிழந்ததாகவும், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தொற்றுகள் அதிகரித்து காணப்பட்டது. மே மாதத்தில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

 கடந்த 24 மணிநேரத்தில்

கடந்த 24 மணிநேரத்தில்

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில 7,447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சம் 3,404 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை வரை இந்தியாவில் மொத்தம் 3,47,26,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து 7,886 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 86,415 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 391 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,869 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 70,46,805 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 135 கோடியே 99 லட்சத்தை எட்டியுள்ளது.

 உ.பி. காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி

உ.பி. காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி

தற்போது உத்தரபிரதேச சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது கொரோனா மரணம் தொடர்பான கேள்விகளை காங்கிரஸ் எம்எல்ஏ தீபக் எழுப்பியிருந்தார். அதில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மாநிலத்தில் உயிரிழப்பு இல்லை என அமைச்சர்களால் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைவதாக அமைச்சர்களே பலமுறை அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு வைத்தனர் என பேசினார்.

 ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணம்

ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணம்

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தீபக், மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழப்புகள் அதிகம் நிகழும் சம்பவங்கள் தற்போது வெளிப்படையாக தெரிந்துவிட்டன. ஆனால் அரசாங்கம் இதை மறுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்படும் உயிரிழப்புகளின் மரணங்கள் குறித்த உண்மையான விவரங்கள் மாநில அரசிடம் உள்ளதா? இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் ஓடுவது அரசாங்கத்திற்கு தெரியாதா? ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுவதை எல்லாம் அரசாங்கம் கவனிக்கவில்லையான என கடுமையாக கேள்விகள் எழுப்பியிருந்தார்.

 ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலி இல்லை

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலி இல்லை

காங்கிரஸ் எம்எல்ஏ தீபக் சிங்கின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தால் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின்போது 22,915 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கான இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு இறப்பு சான்றிதழ்களில் கூட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு என குறிப்பிடவில்லை எனக் கூறிவிட்டு அமர்ந்து விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+