அக்னி வீரர் பணிக்கு 35 லட்சம் உ.பி இளைஞர்கள் விண்ணப்பம்.. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது: ப.சிதம்பரம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற PET தேர்வுக்கு 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதில் சில ஆயிரம் காலிப்பணியிடங்கள் மட்டுமே இருந்தன.
இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படையில் சேர்ந்து 'அக்னி வீரர்' ஆவதற்கு சுமார் 35 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனை டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களுக்கு செய்தது இதுதான்" என்று விமர்சித்துள்ளார்.

வேலையின்மை
நாட்டில் வேலையின்மை பிரச்னை ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் விடுதலையடைந்தாலும், தற்போது சீனாவில் வேலையின்மை விகிதம் 4 சதவிகிதம்தான். ஆனால் இந்தியாவில் 8 சதவிகிதமாக இருக்கிறது. இதனை இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் CMIE எனும் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்திருக்கிறது. நகர்ப்புறத்தில் 7.3 சதவிகிதமும், கிராமப்புறத்தில் 8.3 சதவிகிதமும் இந்த வேலையின்மை விகிதம் பதிவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம்
இன்னும் தெளிவாக சொல்வதெனில், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் PET தேர்வு நடைபெற்றது. இதில் சில ஆயிரம் காலிப்பணியிடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த தேர்வுக்கு சுமார் 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். அந்த அளவுக்கு இந்தியாவில் வேலையின்மை திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் CMIE அறிக்கையின்படி இம்மாநிலத்தில் வேலையின்மை விகிதம் மிகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னிவீர்
ஆக இவ்வளவு குறைந்த விகிதம் உள்ள மாநிலத்திலேயே லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு திண்டாடப்படக்கூடிய நிலையில் இந்தியா முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நிச்சயம் கோடிக்கணக்கில் இருக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் மூலம் தற்காலிக பாதுகாப்புப் படை வீரராக ('அக்னிவீர்') பணியாற்ற இளைஞர்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பம்
இதற்கு 35 லட்சம் உத்தரப் பிரதேச இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதுமே 14 லட்சம் வீரர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 35 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "உத்தரப் பிரதேசத்தில் கிரேடு 'சி' வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது அக்னிவீர் பணிக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மோடி செய்தது இதுதான்
வேலையில்லாமல் விரக்தியில் இருக்கும் இளைஞர்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்க்கிறதா? கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களுக்கு செய்தது இதுதான். வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறைவான மதிப்பீடுதான். நிதி அமைச்சகத்தின் செப்டம்பர் மாத மதிப்பாய்வில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!" என்று கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications