1 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ரிட்டர்ன்... கொரோனாவின் கோரப் பிடியில் உ.பி. ஜவுன்பூர் மாவட்டம்
லக்னோ: பிற மாநிலங்களில் பணிபுரிந்த சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால் இன்று உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டமே கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் மிக மிக உள்மாவட்டம் ஜவுன்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டனர்.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு
இங்கு ஏப்ரல் 11-ந் தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்ச்சை பெறுவோர் எண்ணிக்கை 867 ஆக இருந்தது. ஆனால் 10 நாட்களில் அதாவது ஏப்ரல் 27-ல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்தது.

திடீர் தாக்குதல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர்கள், ஜவுன்பூர் மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் சொந்த ஊரைவிட்டு வெளியே செல்லாத கிராம மக்களாக இருந்தனர். வெளி உலகத் தொடர்பே இல்லாத இவர்களுக்கு எப்படி இப்படி கொரோனா பாதிப்பு இருந்தது என்பது புரியாததாகத்தான் இருந்தது.

காரணமே இடம்பெயர் தொழிலாளர்கள்
பின்னர் மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில்தான் இதன்பின்னணியே தெரியவந்தது. அதாவது ஹோலி பண்டிகை தொடங்கி தற்போதைய உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் வரை அடுத்தடுத்து பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் குறுகிய காலத்திலேயே ஜவுன்பூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்.

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
அப்படி வந்து சேர்ந்தவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்யவில்லை; பிற மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறோமே என தனிமைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. வழக்கம் போல சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். இதன்விளைவுதான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது என்கின்றனர்.

மருத்துவ கட்டமைப்பு மோசம்
அத்துடன் பொதுவாக உத்தரப்பிரதேசத்தில் மருத்துவ கட்டமைப்பு படுமோசம்தான். அதுவும் ஜவுன்பூர் போன்ற கிராமப்புற உள் மாவட்டங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதே இல்லை. இதனால்தான் கொரோனாவின் கொடூரத் தாக்குதலை தாக்குபிடிக்காமல் மக்கள் உயிருக்கு போராடுகின்றனர் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications