புதைக்குழியில் சிக்கிய முதியவர்! காப்பாற்றாமல் சிரித்தபடி வீடியோ எடுத்த போலீஸ்! உபியில் பரபர சம்பவம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் புதைக்குழியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை காப்பாற்றாமல் அவரை பார்த்து சிரித்தபடியே போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பலரது கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.
ஆபத்தில் இருக்கும் நபரை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் அதை எள்ளி நகையாடும் விதமாக காவலர் நடந்து கொண்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதுபோன்ற சில போலீஸாரால் தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

தீரமான போலீஸார்..
மக்களை பாதுகாக்கவும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதனை முன்சென்று தடுக்கவுமே காவல்துறை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒருகாலத்தில், தனது உயிரையும் கொடுத்து மக்களை காப்பாற்ற துணிந்த தீரர்கள் காவல்துறையில் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். ஆனால் அதுபோன்ற வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏதோ சம்பளத்துக்காக வந்தோமா.. வேலை பார்த்தோமா என்பதோடு பல போலீஸ்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். காவல்துறையில் பணம் கொடுத்து வேலைக்கு சேரும் போக்கு என்றைக்கு வந்ததோ, அன்றைக்கே திறமையான நபர்கள் காவல்துறைக்கு வருவது குறைந்துவிட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சில வருடங்களாகவே இந்த மாவட்டத்தில் மழைப்பொழிவின் அளவு குறைவாக உள்ளது. இதனால் இங்குள்ள ஆறுகள், வாய்க்கால்கள் வறண்டு போய் மைதானங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்குள்ள வீடுகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. நடந்து சென்று ஏதாவது நீர்நிலைகளில் இருக்கும் சிறிது நீரை மட்டும் மக்கள் எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் மண்ணோடு கலந்த நீரையே வடிகட்டி அந்த மக்கள் குடித்து வருகின்றனர்.

புதைக்குழியில் சிக்கிய முதியவர்
இந்நிலையில், நேற்று தனது வீட்டுக்கு குடிநீரை எடுப்பதற்காக 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர் ஒருவர் பல கிலோமீட்டர் தூரம் உள்ள நீர் நிலைக்கு சென்றிருக்கிறார். அங்கு நீர் மிகவும் குறைவாக இருந்ததால் குடத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு அங்கிருக்கும் சகதி மண்ணில் அவர் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள புதைக்குழியில் முதியவர் கால் வைத்து விட்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர், வெளியே வர முடியாமல் தவித்தார். மேலும், அவரை புதைக்குழி உள்ளே இழுத்தது. நல்ல வேளையாக அங்கு வந்த சில சிறுவர்கள், முதியவர் சிக்கியிருப்பதை பார்த்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

வீடியோ எடுத்த போலீஸார்
இதையடுத்து அங்கு வந்த அவர்கள், முதியவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் சிறிது முன்னால் சென்றாலும் காப்பாற்ற வந்தவர்களும் புதைக்குழியில் சிக்க நேரிடும். இதனால் அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். எனினும், உடனடியாக வராமல் ஒரு மணிநேரத்துக்கு பிறகு அங்கு ஒரே ஒரு போலீஸ் காவலர் வந்துள்ளார். அதற்குள்ளாக அக்கம்பக்கத்தில் உள்ள குச்சிகளை எடுத்து வந்து அங்கிருந்த மக்களே அந்த முதியவரை ஓரளவுக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர். இவை அனைத்தையும் பார்த்த பிறகும், முதியவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அந்த காவலர், தனது செல்போனை எடுத்து அந்த முதியவர் படும் பாட்டை சிரித்தப்படியே அவர் வீடியோ எடுத்தார். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி, அந்த காவலருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications