அயோத்தி ராமர் கோவிலில்.. சினிமா பாடலுக்கு குத்தாட்டம்.. 4 பெண் போலீசுக்கு அதிரடி தண்டனை.. போச்சே
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி என்ற இடத்தில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில் அவர்களுக்கு அதிரடியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், சட்ட போராட்டங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம் 110 ஏக்கரில் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் அமைய உள்ளது. இந்த கோவில் கட்டும் பணியை 2020 ஆகஸ்ட் 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

விறுவிறுப்பாக கட்டுமான பணி
இந்த கோவில் கட்டும் பணியை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கோவில் கர்ப்பகிரஹ பணி முடிக்கப்பட உள்ளது. 2024ல் கோவிலின் முழு பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசாார்
இதற்கிடையே கோவலை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் போலீசார் கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நடனமாடிய பெண் கான்ஸ்டபிள்கள்
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் கான்ஸ்டபிள்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வெளியானது. அதாவது 3 பெண் போலீசார் போஜ்புரியின் சினிமா பாடலுக்கு நடனமாடி, ஒரு பெண் போலீஸ் அதனை வீடியோவை பதிவு செய்தார். அவர்கள் போலீஸ் உடையில் இல்லாமல் சாதாரண உடையில் நடனமாடினார்கள். இருப்பினும் இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

பாய்ந்த நடவடிக்கை
இந்நிலையில் தான் பணியின்போது பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு நடனமாடியதாக கூறி அவர்கள் 4 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்படி பெண் கான்ஸ்டபிள்களான கவிதா படேல், காமினி குஷ்வாஹா, காசிஷ் சாகினி, சந்தியா சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சீனியர் சூப்பிரண்டு முனிராஜ் பிறப்பித்தார். மேலம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் எஸ்பி (பாதுகாப்பு) பங்கஜ் பாண்டேவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications