Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதி வெறிய தகர்த்துட்டோம்.. மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான்.. 80 % இடங்களில் வெற்றி.. உபியில் யோகி!

Subscribe to Oneindia Tamil

லக்னோ : கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாதிவெறி தகர்த்தப்பட்டுள்ளது எனவும் பரம்பரை அரசியல் செய்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது 80 சதவீத இடங்களை கைப்பற்றி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.

7ஆம் கட்ட வாக்குப் பதிவு

7ஆம் கட்ட வாக்குப் பதிவு

403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவு 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப் பதிவு 20ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக வாக்குப் பதிவு 23ஆம் தேதியும், 5ஆம் கட்ட வாக்கு பதிவு 27ஆம் தேதியும் நடைபெற்றது. கடைசியாக 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 3ஆம் தேதியும் நடைபெற்று முடிவடைந்தது.

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

உத்திரபிரதேச மாநிலத்தில் இதுவரை 349 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்தநிலையில் பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் "இதுவரை நடைபெற்ற 6 கட்ட வாக்குப் பதிவில் தேசியவாதம் , வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்காக பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என கூறினார். மேலும் உத்திரப்பிரதேசத்தில் சாதி தகர்க்கப்பட்டு உள்ளது எனவும் பரம்பரை பரம்பரையாக அரசியல் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்து விட்டதாக கூறினார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஏழாவது கட்ட வாக்குப்பதிவிலும் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.

Recommended Video

    ஆர்வமாக பிரச்சாரத்திற்கு வந்த உ.பி பாஜக எம்எல்ஏ.. மாட்டு சாணத்தை வீசி! கல் எறிந்து! துரத்திய மக்கள்
    மீண்டும் வாய்ப்பு

    மீண்டும் வாய்ப்பு

    வாக்குப்பதிவு முடிந்து மார்ச் மாதம் பத்தாம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 80 சதவீத இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் எதிர்க்கட்சியினர் , குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பார்கள் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். உத்திர பிரதேச மக்கள் எதிர்க்கட்சிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது" எனக் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+