"எப்படி இருக்கீங்க.." டக்குனு அகிலேஷ் யாதவுக்கு போன் போட்ட யோகி ஆதித்யநாத்.. அடடே
லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் பாஜகவுக்கு எதிராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.

தற்போது அகிலேஷ் யாதவ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திங்கள்கிழமை முதல் மத்திய மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிம்பிள் யாதவ் கூறுகையில், 2 தடுப்பூசிகள் போட்ட நிலையிலும் எந்த அறிகுறி இல்லாமலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொடர்பு கொண்டு அவரது மனைவி, மகள் ஆகியோரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அகிலேஷ் குடும்பத்தினர் விரைவில் குணமடைய தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
அதேநேரத்தில் அகிலேஷ் யாதவ் தடுப்பூசி போட மறுத்து வருகிறார். இது தொடர்பான பேட்டி ஒன்றில், நான் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தேன். அதனால் எனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்துக்குப் பதில் தேசியக் கொடி படம் அச்சிடப்பட்டால்தான் தடுப்பூசி போடுவேன் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications