பாஜக கொடியை கூட எங்க பஸ்களில் பறக்கவிடுங்க..தொழிலாளர்களை ஊருக்கு போக விடுங்க... பிரியங்கா காந்தி
லக்னோ: தாங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் பாஜக கொடிகளை கூட பறக்கவிடுங்கள்- ஸ்டிக்கரையும் ஒட்டிக் கொள்ளுங்கள்.. ஆனால் இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கதான் வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா லாக்டவுனால் பிற மாநிலங்களில் சிக்கிய இடம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இதனால்தான் அனைத்து தரப்பினரும் இப்போதாவது இடம்பெயர் தொழிலாளர்களின் துயரம் குறித்து கதறுகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பிற மாநிலங்களில் தவிக்கும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களை அழைத்துவர 1,000 பேருந்துகளை இயக்கப் போகிறோம்; இதற்கு அனுமதி தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி ஒரு கடிதம் கொடுத்திருந்தார். இதில் இருந்து அரசியல் விளையாட்டுகள் கிறுகிறுக்க வைத்துவிட்டன.

கிண்டலடித்த பாஜக
பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று பேருந்துகளை அனுமதிக்கிறோம்; ஆனால் பேருந்து விவரங்கள், ஓட்டுநர் விவரங்களை கொடுக்க வேண்டும் என்றது உ.பி. அரசு. இது தொடர்பான விவரங்களை காங்கிரஸ் அளித்ததை வைத்து கிண்டலடித்தது பாஜக. காங்கிரஸ் தந்த பட்டியலில் டூ வீலர்கள், ஆட்டோக்களின் எண்கள்தான் இருக்கிறது என விமர்சித்தனர்.

எங்களுக்கு அனுமதி தாருங்கள்
இந்த அரசியல் சித்துவிளையாட்டு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி வீடியோ மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 1000 பேருந்துகளை நாங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். அவற்றை பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்துங்கள். எங்களுக்கு அனுமதி கொடுங்கள்.

பாஜக கொடியை கூட...
நீங்கள் விரும்பினால் அந்த பேருந்துகளில் பாஜகவின் கொடியை கூட பறக்கவிடுங்கள். பாஜக அடையாளங்களையும் பேருந்துகளில் ஒட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதுதான். எங்களுக்கு இருக்கக் கூடிய பொறுப்புகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

தேசத்தின் முதுகெலும்புகள்
இடம்பெயர் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்த நாட்டில் வாழும் இந்தியர்கள் என்பது மட்டும் இல்லை. அதற்கும் மேலாக இந்த தேசத்தின் முதுகெலும்புகள். இந்த இடம்பெயர் தொழிலாளர்களின் வேர்வையிலும் ரத்தத்திலும்தான் இந்த தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாம் அனைவருக்குமான பொறுப்பு இருக்கிறது. அரசியல் செய்வதற்கு இது நேரம் அல்ல என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரியங்கா காந்தி.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications