தெரிந்து பேசினாரா? தெரியாமல் பேசினாரா? போகிற போக்கில் கொளுத்திப் போட்ட செல்லூர் ராஜூ!
மதுரை: மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக அமைச்சர்களில் ஒருவர் கூட அங்கு வந்து மரியாதை செய்யவில்லை எனக் கூறினார்.
நாயக்கர் சமுதாய மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற திமுக இப்படிச் செய்யலாமா என்றும் இதனால் அந்தச் சமுதாய மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார் செல்லூர் ராஜூ.
இதனிடையே அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், மூர்த்தியும் செல்லூர் ராஜூவுக்கு முன்பாக ஏற்கனவே திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

திருமலை நாயக்கர்
திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் மரியாதை செலுத்த வந்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாயக்கர் சமுதாயத்தை திமுக அரசு புறக்கணிப்பதாக பேசினார். திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவுக்கு ஒரு அமைச்சர் கூட மரியாதை செலுத்த வரவில்லை எனத் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ
அவர் இவ்வாறு பேட்டி அளித்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இரண்டு அமைச்சர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர். பழனிவேல் தியாகராஜனும், மூர்த்தியும், வந்து சென்ற தகவல் தெரிந்து தான் பேசினாரா அல்லது அமைச்சர்கள் வருகை குறித்த தகவல் தெரியாமல் பேசினாரா எனத் தெரியவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் செல்லூர் ராஜூவின் இந்தப் பேட்டியில் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

காழ்ப்புணர்ச்சி
மேலும், பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவே மாறிய செல்லூர் ராஜூ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசை திமுக அரசு குறை கூறி வருவதாக தெரிவித்தார். தமிழ் மொழியை உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் தமிழர்களின் பெருமையையும், வரலாற்றையும் எடுத்துக்கூறிய ஒரே பிரதமர் மோடி தான் எனவும் பாராட்டு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

தமிழ்ப்பற்று
பிரதமர் மோடி குஜராத்தில் பிறந்தவராக இருந்தாலும் தமிழ் மீது பற்று கொண்டவர் என்றும் சீன பிரதமரை அழைத்து வந்து தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தவர் மோடி எனவும் தெரிவித்தார். மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் பிரதமரின் அனுமதியால் தான் 11 மருத்துவக்கல்லூரிகள் தற்போது தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications