ராஜன் செல்லப்பா மீண்டும் சொல்றத பார்த்தா.. அதிமுகவுல எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்காங்க போலயே
Recommended Video
மதுரை: அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என போர்க்கொடி உயர்த்திய ராஜன் செல்லப்பா, தன் முடிவில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை என்றும் தன் கருத்தை ஆதரித்து பலரும் தொலைப்பேசியில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூம் எடுத்துள்ளது. அதிமுகவில் ஒவ்வொருவரும் தலைமை மீது உள்ள அதிருப்தியை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொடி உயர்த்தினார் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா.

அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கக்கூடாது என்றும் ஒற்றை தலைமை தேவை என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்தினார்.
இந்நிலையில் ராஜன் செல்லப்பா நேற்று இது பற்றி மீண்டும் பேசுகையில், "ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் சந்தித்தும் தொடர்ப்பு கொண்டும் பேசினேன். அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்த பின்னரே நான் கட்சியில் இரட்டை தலைமை இருக்கக்கூடாது ஒற்றை தலமை தேவை என்று சொன்னேன்.
இதன் பின்னர் நிறையே எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்.அவர்கள் யார் யார்எ ன்ற பட்டியலே உள்ளது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை. என் கருத்து நெகட்டிவான கருத்து என்று யாரும் கூறவில்லை. எனக்கு ஆதரவு என பகிரங்கமாக யாரும் சொல்லவில்லை அவ்வளவு தான். குன்னம் ராமசந்திரன் போல் பலரும் உரிய நேரத்தில் வெளிப்படுத்துவார்கள் பொறுத்திருந்து பாருங்கள், விரைவில் ஒற்றைத் தலைமைக்கான முடிவு நிச்சயம் ஏற்படும். கட்சியில் எதிர்காலம் கருதி வெளியிட்ட முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்" இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications