Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மா.சுப்பிரமணியன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக ட்விட்டரில் அறிவித்தனர்.

இது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன்பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டது தெரிய வந்தது. வாடகை தாய் முறை என்பது நயன்தாரா வயிற்றில் கரு வளராமல், வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து, இவர்கள் குழந்தை பெற்றுள்ளனர்.

சமூக வலைதளங்களில் எழுந்த விவாதம்

சமூக வலைதளங்களில் எழுந்த விவாதம்

இதனைத்தொடர்ந்து வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது சரியா என்ற விவாதம் ஒரு பக்கம் எழுந்தது. அதேபோல் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளதாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

விதிமீறல்?

விதிமீறல்?

வாடகை தாய் மூலம் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாரூக் கான் - கவுரி கான் உள்ளிட்ட பலரும் குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் சினிமா பிரபலங்களில் முதல்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் முதல்முறையாக குழந்தைப் பெற்று கொண்டுள்ளது. இது ரசிகர்களிடையே விவாதமாக மாறியுள்ளது. இதில் விதிமீறல் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை விசாரணை

சுகாதாரத்துறை விசாரணை

இந்தியாவில் 21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். அதற்கு திருமணமாகி, கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதனால் விதிமுறைகளை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என்று பார்க்கப்படும் எனவும், பொது சுகாதாரத்துறையின் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொண்டார்களா என்று விளக்கம் கோரப்படும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மா.சுப்பிரமணியன் விளக்கம்

மா.சுப்பிரமணியன் விளக்கம்

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் விதிகளை பின்பற்றி குழந்தை பெற்றுக்கொண்டார்களா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் தான், விதிமீறல் இருக்கிறதா என்பது கண்டறியப்படும். அதன் பின்னர் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+