போட்டோவை பார்த்ததும் டென்ஷன் ஆன நீதிபதிகள்.. ‘மனித கழிவை மனிதனே அள்ளூவதா?’ கலெக்டர்களுக்கு வார்னிங்!
மதுரை : மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதக் கழிவை அள்ள மனிதர்களையே பயன்படுத்துவதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்திருந்தபோது, மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டவை எனக் கேட்ட நீதிபதிகள், குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அந்த மாவட்ட ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர்.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது எனக் கடுமையாகத் தெரிவித்த நீதிபதிகள், தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

என்று தீரும் இந்தக் கொடுமை?
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்கள் பலமுறை கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தும் கூட, இன்னும் பல இடங்களில் மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களையே ஈடுபடுத்தும் கொடுமை தொடர்ந்து வருகிறது. சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளின்போது பலர் விஷவாயு தாக்கப்பட்டு பலியாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

இன்னும் தொடர்கின்றன
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் துப்புரவாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷவாயு தாக்கி, அவர்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன.

2013 மறுவாழ்வுச் சட்டம்
துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கையால் மலம் அள்ளுவது முழுவதுமாக தடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.

ரோபோக்களை பயன்படுத்த வேண்டும்
மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது தடுக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பாதாள சாக்கடைகளில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இவை எங்கே எடுக்கப்பட்டவை என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டவை என தெரிவித்தார்.

கலெக்டர்களுக்கு எச்சரிக்கை
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர். மேலும் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications