Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை ஜல்லிக்கட்டு.. துள்ளி வரும் காளைகள் அடக்கும் மாடு பிடி வீரர்களே.. ஆன்லைனில் முன்பதிவு அவசியம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ள நிலையில் வீரர்களுக்கு முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் பண்பாடு சார்ந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழகம் நெடுகிலும் நடத்தப்பட்ட கடும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது.

Madurai Jallikattu Online reservation is required says district administration

இருப்பினும், ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், அதனை மாநில அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தொடர்ந்து, பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையிலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.

Madurai Jallikattu Online reservation is required says district administration

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி,மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும் என்று கூறினார்.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Madurai Jallikattu Online reservation is required says district administration

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பலரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்காகவே ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. எனவே, அதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. காப்பீடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போட்டிகளை நடத்துபவர்களை காப்பீடும் செய்கின்றனர். வரும் காலங்களில் போட்டி நடத்தவதற்காக விழா அமைப்பாளர்கள் காப்பீடு செய்வதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+