மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவத்தை பலவீனப்படுத்தி, இளைஞர்கள் வாழ்வில் விளையாடும் மோடி.. அக்னிபாத்தை விளாசிய காங்கிரஸ்

Google Oneindia Tamil News

மதுரை: ‛‛அக்னிபாத் திட்டம் என்பது இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும். இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் இத்திட்டம் மூலம் பிரதமர் மோடி அரசு இளைஞர்கள் வாழ்வில் விளையாடுகிறது'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

Recommended Video

    ராணுவத்தை பலவீனப்படுத்தி, இளைஞர்கள் வாழ்வில் விளையாடும் மோடி.. அக்னிபாத்தை விளாசிய காங்கிரஸ்

    அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம், சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.. 6 மாதங்களில் 5க்கும் மேல் பலி.. என்ன காரணம்? வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.. 6 மாதங்களில் 5க்கும் மேல் பலி.. என்ன காரணம்?

    மதுரை திருப்பரங்குன்றம் பதினாறாம் கால் மண்டபம் அருகே அக்னிபாத் திட்டத்தை கண்டித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

     இந்திய ராணுவத்துக்கு குந்தகம்

    இந்திய ராணுவத்துக்கு குந்தகம்

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறோம். அக்னிபாத் திட்டம் என்பது இந்திய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வரப்போகிறது. இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டமாகவும், ராணுவத்தின் செயல்திறனை குறைக்கும் திட்டமாகவும் இருக்க போகிறது. இது குறித்து ஜனாதிபதியிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர்.

    இளைஞர்கள் வாழ்வில் விளையாடுகிறது

    இளைஞர்கள் வாழ்வில் விளையாடுகிறது

    இந்தத் திட்டம் மூலம் வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக கூறிய மோடி அரசு எந்த செயலும் செய்யாமல் வெறும் ஏமாற்று வேலையை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் வாழ்வில் மோடி அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

    அரசியலில் தரம் குறைந்து வருகிறது

    அரசியலில் தரம் குறைந்து வருகிறது

    அதிமுக கட்சியில் நடப்பதை பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் கவலைப்படுவது இல்லை. அரசியலில் தரம் குறைந்து வருகிறது. அரசியலில் மிகவும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் எப்போதும் கடைபிடிக்கும்.

    ஏமாற்றியது போதும்

    ஏமாற்றியது போதும்

    மதுரை விமான நிலையத்தை பகல் நேர விமான நிலையமாக மட்டுமே செயல்படுத்தும் மோடி அரசை கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தோம். மத்திய விமானத்துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அவரிடம் வலியுறுத்தினோம். கொரோனாவை காரணமாக காட்டி ஏமாற்றியது போதும்.

    மீண்டும் எழுப்புவேன்

    மீண்டும் எழுப்புவேன்

    இரவுநேர சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்றால் மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் வேலைகளும் தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த குறைகள் அனைத்தும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் எழுப்புவேன் மீண்டும் மத்திய அமைச்சரை சந்திப்பேன் மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன்'' என்றார்.

    English summary
    The Agnipath project will spearhead Indian security. With this plan to weaken the Indian Army, Prime Minister Modi's government is playing into the lives of the youth”, says Congress MP Manikkam Tagore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X