Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் ஜெயராஜ்- பெனிக்ஸ் கொலை வழக்கு! 9 போலீஸாருக்கும் ஏப்.2-க்கு தண்டனை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்றைய தினம் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க இருந்த நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ். இருவரும் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது கடையை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சற்று கூடுதலாக திறந்து வைத்ததாக கூறி போலீஸார் தந்தை- மகனை கஸ்டடிக்கு அழைத்துச் சென்றனர்.

sathankulam madurai

அங்கு போலீஸார் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் இருவரும் மரணமடைந்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த மரணத்திற்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தனர்.

ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பால்துரை ஏற்கெனவே உடல்நல பிரச்சனையால் இறந்துவிட்டார். மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

தனது தீர்ப்பில், காவல் துறையினரால் தாக்கப்பட்டதாலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர். போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இது போன்ற துன்புறுத்தல்கள் செய்யப்பட்டது எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான். அது மட்டுமல்லாமல் நாம் அடித்து பழக தந்தையும் மகனும் சிக்கிவிட்டார்கள் என அந்த காவலர்கள் பேசிக் கொண்டே அடித்ததாக நேரில் பார்த்த சாட்சியம் தெரிவித்திருந்தது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் அவர்கள் அணிந்திருந்த ரத்த கறை படிந்த ஆடை முக்கிய ஆதாரமாக கிடைத்ததாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த 9 போலீஸாருக்கும் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு கடுமையான உச்சபட்ச தண்டனை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு அந்த 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அந்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்து தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+