மும்பையில் இரவில் பரபரப்பு! புதுச்சேரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து.. நடந்தது என்ன
மும்பை: மும்பையில் உள்ள மாட்டுங்கா நிலையத்தில் தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ரயில் மும்பை மாட்டுங்கா நிலையத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 3 பெட்டிகள் இந்த விபத்தில் தடம் புரண்டு உள்ளது, அருகில் இருக்கும் மற்றொரு பாதையில் இருக்கும் 3 பெட்டிகளுடன் உரசியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தாதர் டெர்மினஸில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் புறப்பட்ட பிறகு இரவு 9.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.
தாதர்-புதுச்சேரி சாளுக்யா எக்ஸ்பிரஸ், தாதர் டெர்மினஸின் பிளாட்பார்ம் 7-ல் இருந்து டவுன் ஃபாஸ்ட் லைனில் நுழைந்த போது, கிராசிங்கின் பின்பக்கத்தில் இருந்து சிஎஸ்எம்டி-கடக் எக்ஸ்பிரஸ் அதைக் கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications