மருத்துவமனையில் பெரும் தீ.. வேகமாக பல மாடிகள் ஏறி மக்களை மீட்ட ஸ்விக்கி பாய்.. மும்பை ஹீரோ
மும்பையில் கடந்த திங்கள்கிழமை நடந்த தீ விபத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பல மக்களின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
மும்பை: மும்பையில் கடந்த திங்கள்கிழமை நடந்த தீ விபத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பல மக்களின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை மும்பையின் அந்தேரி பகுதியில் மருத்துவமனை ஒன்றில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. காம்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் பலியானார்கள். 150 பேர் காயம் அடைந்தனர். மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்விக்கி டெலிவரி பாய்
இந்த விபத்து நடந்த போது அந்த பகுதிக்கு சாப்பாடு டெலிவரி செய்ய சென்றவர்தான் ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை செய்யும் சித்து ஹியுமனாபேட். மருத்துவமனையில் தீ எரிவதை பார்த்த சித்து வேகமாக பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு பணியில் களமிறங்கினார். முகத்தில் ஒரு கர்சீப் துணியை கட்டிக்கொண்டு அவர் தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

செம
மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளிப்புறமாக வேகமாக ஏறி நான்காவது மாடி, ஐந்தாவது மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்டார். கையில் கல் ஒன்றை எடுத்து சென்று, ஜன்னலை உடைத்து மக்களை அது வழியாக வெளியே கொண்டு வந்து பின் தீயணைப்பு வீரர்களிடம் அளித்தார். நாள் முழுக்க அவர் அன்று மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

எத்தனை பேர்
மொத்தம் இவர் 20 பேருக்கும் அதிகமானோரை உயிரோடு மீட்டு இருக்கிறார். அதில் சிலர் மிகவும் வயதானவர்கள் என்று கூறப்படுகிறது. காப்பாற்றப்பட்ட அனைவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சிகிச்சை
தற்போது இவர் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மக்களை காப்பாற்றும் போது இவர் மூக்கில் அதிகப்படியான புகை சென்று சுவாச பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இவர் மாட்டியிருந்த கர்சீப் மக்களை காப்பாற்றும் போதே எங்கேயோ விழுந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் எங்கே
அதேபோல் இவர் நிறுத்தியிருந்த வண்டியின் ஹெல்மெட்டை யாரோ திருடிவிட்டனர் என்றும் இவர் கூறியுள்ளார். கீழே வாகனத்தை நிறுத்திவிட்டு மக்களுக்கு உதவி செய்துகொண்டு கொண்டு இருந்த போது யாரோ இவருடைய ஹெல்மெட்டை திருடிவிட்டதாக கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications