போதை ஏறிப் போச்சு! போதைப் பொருள் டான்களுடன் கனெக்சன்! போலீசிடம் தொக்காய் சிக்கிய பிரபல நடிகை! ஷாக்!
மும்பை : போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நடிகை நடிகர்கள் சிக்கி வரும் நிலையில் தற்போது போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் ஒரு நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம் பாலிவுட் திரையுலகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவர் போதை பொருள் பழக்கத்தில் இருந்தார் என கூறியதை எடுத்து இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.

போதைப் பொருள்
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் பாலிவுட் திரையுலகில் பல பிரபலங்கள் போதை பொருட்கள் பிடியில் சிக்கி இருப்பதாகவும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதை அடுத்து நடிகைகள் தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங் ,சாரா அளிலிக்கான், ஸ்ரத்தா கபூர், சார்மி, ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகைகளுக்கு தொடர்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர நடிகையான சஞ்சனா கல்ராணி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள சஞ்சனா தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு நடிகை
கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு நடிகை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னடத்தில் ரிங் மாஸ்டர் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா குமாரி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வேதா குமாரி
ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா குமாரி மெஃபேட்ரோன் என்ற போதைப்பொருள் விற்கும் கும்பல் தொடர்பில் இருந்ததாகவும் இதை எடுத்து அவரை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர் இதன் காரணமாக திரையுலகில் மீண்டும் போதை பொருள் விவகாரம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications