Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதை ஏறிப் போச்சு! போதைப் பொருள் டான்களுடன் கனெக்சன்! போலீசிடம் தொக்காய் சிக்கிய பிரபல நடிகை! ஷாக்!

Subscribe to Oneindia Tamil

மும்பை : போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நடிகை நடிகர்கள் சிக்கி வரும் நிலையில் தற்போது போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் ஒரு நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

    டாஸ்மாக்ல விக்கிற சரக்குலாம் போதை பொருட்கள்ல வராதா ? - சீமான் கேள்வி

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம் பாலிவுட் திரையுலகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அவர் போதை பொருள் பழக்கத்தில் இருந்தார் என கூறியதை எடுத்து இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    போதைப் பொருள்

    போதைப் பொருள்

    சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் பாலிவுட் திரையுலகில் பல பிரபலங்கள் போதை பொருட்கள் பிடியில் சிக்கி இருப்பதாகவும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதை அடுத்து நடிகைகள் தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங் ,சாரா அளிலிக்கான், ஸ்ரத்தா கபூர், சார்மி, ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    நடிகைகளுக்கு தொடர்பு

    நடிகைகளுக்கு தொடர்பு

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர நடிகையான சஞ்சனா கல்ராணி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள சஞ்சனா தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கு நடிகை

    தெலுங்கு நடிகை

    கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு நடிகை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னடத்தில் ரிங் மாஸ்டர் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா குமாரி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்வேதா குமாரி

    ஸ்வேதா குமாரி

    ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா குமாரி மெஃபேட்ரோன் என்ற போதைப்பொருள் விற்கும் கும்பல் தொடர்பில் இருந்ததாகவும் இதை எடுத்து அவரை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர் இதன் காரணமாக திரையுலகில் மீண்டும் போதை பொருள் விவகாரம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+