கொரோனா 3-வது அலை? மகாராஷ்டிராவில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணங்களில் திடீர் அதிகரிப்பு
மும்பை: நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 118 நாட்களில் குறைவான பாதிப்பு.

உலக நாடுகளில் அதிகரிப்பு
அதேநேரத்தில் இந்தியாவின் ஒருநாள் பாதிப்புக்கு இணையாக உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது என கூறப்படுகிறது. இந்தியாவிலும் கடந்த 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கடந்த 10 நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூலை 2-ந் தேதி முதல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 8 ஆயிரத்தை தாண்டியதாகவே இருக்கிறது. ஜூன் மாதத்தில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றம் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா மரணங்கள் கூடுகிறது
மேலும் மகாராஷ்டிராவின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் கடந்த 10 நாட்களில் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஜூலை 1-ந் தேதி ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 334 ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை கடந்த 10-ந் தேதி முதல் 400- ஐ தாண்டியதாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கேரளாவில் குறைகிறது
நாட்டில் கேரளா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு, மரணங்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications