மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணவர் ஆபாச படம் எடுத்த போது செய்தது என்ன? ஷில்பா ஷெட்டி தந்த திடுக் வாக்குமூலம்.. குழம்பிய போலீஸ்

Google Oneindia Tamil News

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகை ஷில்பா ஷெட்டி இயக்குனரும் தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ராஜ்குந்த்ரா பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டது.

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்

இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சோதனையில் சிக்கின. பெண்களை வைத்து மோசமான ஆபாச படங்களை தயாரித்து அதை இணையத்தில் தனி வெப்சைட்களில் வெளியிட்டதும், இதற்காக மொபைல் ஆப்களை அவர் உருவாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

கைது

இதையடுத்து மும்பை போலீசார் இவரை கைது செய்தனர். இவர் ஹாட்ஷாட்ஸ் என்ற பெயரில் இந்த ஆபாச செயலியை நடத்தி வந்து இருக்கிறார். இது தொடர்பாக கூகுளுக்கு புகார் சென்ற நிலையில் அந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அதன்பின் மீண்டும் இவர் பாலிபேம் என்ற இன்னொரு செயலியை உருவாக்கி இருக்கிறார்.

நீக்கம்

நீக்கம்

ஆனால் அந்த செயலியும் போலீஸ் நடவடிக்கைக்கு பின் நீக்கப்பட்டது. இது இரண்டிலும் பெண்களின் ஆபாச வீடியோக்களை ஷில்பா ஷெட்டியின் கணவர் வெளியிட்டு வந்து இருக்கிறார். பல பெண்களின் வீடியோக்கள், பாலியல் ரீதியான புகைப்படங்கள் இதில் இருந்துள்ளன. இந்த வழக்கில் மும்பை தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

வியான் நிறுவனம்

வியான் நிறுவனம்

வியான் என்ற நிறுவனத்தின் அலுவலகங்களை பயன்படுத்திக்கொண்டு இந்த வீடியோக்களை தினமும் இவர் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில்தான் இவர் உட்பட மேலும் 7 ஊழியர்கள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் ராஜ்குந்த்ராவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். ராஜ்குந்த்ரா மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் ரியான் தோர்பே ஆகியோருக்கு எதிராக 1,500 பக்க குற்றப்பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார தாக்கல் செய்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதில் ராஜ்குந்த்ரா கொடுத்த வாக்குமூலத்தில், நான் பாலியல் ரீதியான படங்களை எடுக்கவில்லை. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமில் கூட இப்படி வீடியோக்கள் இருக்கின்றன. நான் அடல்ட் வீடியோ மட்டுமே எடுத்தேன். இது ஆபாச படங்கள் கிடையாது. தவறான நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. பாலிவுட் படங்களில் கூட இப்படி எல்லாம் காட்சிகள் இருக்கின்றன என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி விளக்கம்

ஷில்பா ஷெட்டி விளக்கம்

ஷில்பா ஷெட்டி கொடுத்த வாக்குமூலத்தில்.. எனக்கு இதெல்லாம் தெரியாது. இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இதை எல்லாம் கவனிக்க எனக்கு நேரம் கிடையாது. அவர் ஆபாச படம் எடுத்த போது நான் அருகிலேயே இல்லை. நான் பிசியாக இருந்தேன். அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று எனக்கு தெரியாது என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

இவரின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்ட நிலையில் அவர் இப்படி மொத்தமாக எதுவுமே தெரியாது என்று கொடுத்துள்ள வாக்குமூலம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஷில்பா ஷெட்டி இப்படி தெரிவித்து இருந்தாலும் அவரிடம் மேலும் விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கில் மேலும் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
I did not know anything, I was busy in other works says Shilpa Shetty on husband Raj Kundra Porn Film case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X