காந்தியை கொன்றதற்கு கோட்சேவுக்கு நன்றி கூறிய பெண் ஐஏஎஸ் அதிகாரி.. கடும் எதிர்ப்புக்கு பின் இடமாற்றம்
மும்பை: மகாத்மா காந்தியை விமர்சித்ததாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் நிதி சவுதாரி. ஐஏஎஸ் அதிகாரியான இவர் மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய பதிவை செய்திருந்தார்.
அதில் அவர் கூறுகையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்து வருவது விந்தையாக உள்ளது. அவரது உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்குவோம். உலகம் முழுவதிலுள்ள காந்தியின் சிலைகளை அகற்றுவோம். கல்வி நிறுவனங்கள், சாலைகள் என அனைத்துக்கும் அவரது பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைப்போம்.

சர்ச்சை
இதுதான் நாம் மகாத்மா காந்திக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். அது போல் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். இந்த டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சரத்பவார் கடிதம்
இந்த நிலையில் சவுதாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தினார். இந்த நிலையில் மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கடிதம் எழுதினார்.

சவுதாரி விளக்கம்
இந்த நிலையில் காந்தியை தான் தரக்குறைவாக பேசவில்லை என்றும் கோட்சே ஆதரவாளர்களை கிண்டல் செய்யவே அவருக்கு நன்றி என போட்டதாகவும் தனது கருத்து திரித்து கூறப்பட்டுவிட்டது என்றும் சவுதாரி விளக்கம் அளித்தார்.
|
விளக்கம்
இதனிடையே அவரை மந்த்ராலயாவில் குடிநீர் விநியோக துறையின் துணை செயலாளர் பணிக்கு இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தியை விமர்சித்தது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications