விமானங்களை போல் அரசு பேருந்துகளில் விமான பணிப்பெண்கள் நியமனம்! இது என்ன புதுசா இருக்கே!
மும்பை: மகாராஷ்டிர மாநில அரசு பேருந்துகளில் விமானங்களில் இருப்பதை போல் பணிப்பெண்களை அந்த மாநில அரசு அமர்த்தியுள்ளது. எந்தெந்த பேருந்துகளுக்கு விமான பணிப்பெண்கள் நியமித்துள்ளார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
விமானங்களில் விமானப் பணிப்பெண்கள் இருப்பார்கள். இவர்களது பணி தேசிய , சர்வதேச , வணிக, பட்டய மற்றும் ராணுவ விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதே அவர்களுடைய பணியாகும்.

விமான விதிகள் குறித்து பயணிகளுக்கு விளக்க வேண்டும். விமானத்தின் தூய்மை, இருக்கைகள், உணவுகள் சரியாக உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
பயணிகளை வரவேற்று அவரவர் இருக்கைகளுக்கு செல்ல வழிகாட்டிட வேண்டும். அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என்பதையும் சரி பார்க்க வேண்டும். பயணிகளுக்கான உணவை கொடுத்தல், மருத்துவ பராமரிப்பு , மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இதற்கென 2 ஆண்டுகள் படித்தல் வேண்டும். ஹேர் ஹோஸ்டஸ்களுக்கான வயது வரம்பு என்பது 18 வயது முதல் 26 வயது வரையாகும். இவர்களுக்கு விமான நிறுவனங்களுக்கேற்ப மாதம் ரூ 1 லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. இதே போன்ற விமான பணிப்பெண்களை அரசு பேருந்துகளிலும் இயக்கலாம் என மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை நியமிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. அதில் முதல் கட்டமாக மும்பை, புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் சிவ்னெரி சுந்தரி என்ற பெயரில் பணிப்பெண்களை நியமித்துள்ளனர்.
இவர்கள் பயணிகள் பேருந்துகளில் ஏறும் போது அவர்களை வரவேற்பதற்கும் பயணிகள் ஏறி இறங்க உதவுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை, புனேவுக்கான வழித்தடம் 200 கி.மீ. நீளமானது. இதுகுறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இயங்கி வரும் அரசு பேருந்துகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை, பேருந்து நிலையங்களில் பெண்களுக்கென கழிப்பறை வசதிகளும் சுத்தமாக இல்லை. இது போன்ற பிரச்சினைகளை சரி செய்யாமல் சிவ்னெரி சுந்தரிகளை அரசு நியமிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அது போல் மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ஊதியத்தையும் போனஸையும் வழங்குவதில்லை. இந்த பணிப்பெண்கள் குறித்த கான்செப்ட்டுக்கு போக்குவரத்து பணியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications