மும்பையில் கோவாக்சினுக்கு பற்றாக்குறை.. 2ஆம் டோஸை எடுத்துக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
மும்பை: இன்று இரண்டாம் நாளாக மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படாததால், 2ஆம் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் சரியான காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
நாட்டில் தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகத் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கவில்லை.

குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால் அம்மாநில தலைநகர் மும்பையில் சில நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளே முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பூசி 2ஆம் டோஸ் எடுக்க வேண்டியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் மும்பையில் 105 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இன்று மும்பையிலுள்ள மையங்களில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 2ஆவது நாளாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
இதனால் கோவாக்சின் 2ஆம் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் சரியான காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் படி, கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களை 4 முதல் 8 வார இடைவெளியிலும், கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை 4 முதல் 6 வார இடைவெளியிலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications